திருவள்ளூர் ; கும்மிடிப்பூண்டியில் பேட்டரி திருடனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த அரசூர் அப்பலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுவாமிநாதன். இவரின் விவசாய டிராக்டரிலிருந்து பேட்டரியை மர்ம நபர்கள் தேடிச் சென்றனர். இது குறித்து அவர் கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சோழியம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சத்யா (19) என்பவரை கைது செய்தனர்.
மேலும், பேட்டரி திருட்டில் ஈடுபட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த திருப்பாலைவனம் பகுதியை சேர்ந்த கெல்லீஸ் என்கிற விஜி (20) என்பவரை கும்மிடிப்பூண்டி போலீசார் நேற்று கைது செய்தனர். அவனிடம் மேற்கொண்ட விசாரணையில், ஒரு மாதத்திற்கு முன் அவன், திட்டமிட்டு ஒருவரை கொலை செய்தது தெரியவந்தது .
பேட்டரி திருடன் விஜியை தாக்கி, வழிபறியில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த ஒருவனை ஒரு மாதத்திற்கு முன், அவனுக்கு அடையாளம் தெரிந்துள்ளது. அந்த நபரை திட்டமிட்டு, எளாவூர் அழைத்து சென்று, அவருக்கு மது வாங்கி கொடுத்துள்ளான். போதை ஏறியதும், சுவற்றில் தலையை அடித்து மயக்கமடைய செய்து, கழுத்தை அறுத்து கொலை செய்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளான்.
இதையடுத்து, விஜியை அழைத்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு போலீசார் சென்றனர்.
ஓபுளாபுரம் கிராமத்தில் உள்ள தனியார் பிளைவுட் தொழிற்சாலையின் பின்புறம், முட்புதரில் அழுகிய நிலையில் சடலத்தை மீட்டனர். இறந்தவர் யார் என்பது விஜிக்கு தெரியாத நிலையில், கொலை செய்யப்பட்டவர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பேட்டரி திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர் திடீர் திருப்பமாக கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தற்போது தெரியவந்துள்ளது .
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தில் 80 வயது மூதாட்டி இயற்கை உபாதை கழிக்க அருகில் உள்ள…
This website uses cookies.