திருவள்ளூர் : கூவம் பேருந்து நிலையம் அருகே முன்விரோதம் காரணமாக சார்லஸ் என்பவர் வீட்டில் புகுந்து அவரது மனைவி மற்றும் மகள் உள்ளிட குடும்பத்தினரை தாக்கிய சம்பவத்தில் திமுக பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் கொண்டஞ்சேரி பகுதியில் பரிசுத்த மெய் தேவாலயம் செயல்பட்டு வருகிறது. இந்த தேவாலயத்தில் பாஸ்டராக உள்ள தாஸ் என்பவருக்கும், கூவம் பேருந்து நிலையம் அருகே உள்ள சார்லஸ் என்பவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
பாஸ்டர் தாஸ் தேவாலயத்திற்கு வரும் ஒரு சில பெண்களிடம் தவறான தொடர்பு வைத்திருப்பதாகவும், தேவாலயத்தின் கணக்கு வழக்குகளை சரிவர காட்டாமல் மறைப்பதாகவும் கூறி, இருவருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்தது.
இதன் காரணமாக பாஸ்டர் தாஸுக்கு ஆதரவாக திமுக கிளை செயலாளர் அன்பு உள்ளிட்ட அடியாட்கள், நேற்று இரவு சார்லஸின் வீட்டுக்குள் புகுந்து வீட்டில் இருந்த சார்லஸ் மற்றும் அவரது மனைவி விக்டோரியா, மகள் சவிதா, மகன் சாருகேஷ் உள்ளிட்டோரை இரும்பு ராடு மற்றும் கட்டைகளால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் அவரது மனைவி விக்டோரியா, மகள் சவிதா ஆகியோர் தலையில் பலத்த காயங்களோடு திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்
இந்தநிலையில், சார்லஸின் வீட்டுக்குள் சுமார் 5க்கும் மேற்பட்ட அடியாட்கள் புகுந்து தாக்கி பொருட்களை அடித்து நோறுக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து சார்லஸின் சகோதரர் சத்தியமூர்த்தி மப்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மப்பேடு காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து பெண்கள் மீதும் குடும்பத்தினர் மீதும் தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதனிடையே, அடியாட்களை அனுப்பி தாக்குதல் நடத்திய திமுக கிளைச் செயலாளர் அன்புவை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், தலைமறையாக உள்ள பாஸ்டர் தாஸ் உள்ளிட்ட 8 பேரை தேடி வருகின்றனர்.
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…
This website uses cookies.