திருவாரூர் : அரசு நிகழ்ச்சியின் போது மாவட்ட ஆட்சியர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவாரூர் அடுத்த புலிவலம் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரில் தமிழ்நாடு அரசின் ஆட்சியர் பங்கு பெறும் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பயனாளிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் 248 பயனாளிகளுக்கு சுமார் 21 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டிருக்கும்போதே திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் திடீரென மயங்கி விழுந்தார்.
அருகாமையில் இருந்தவர்கள் அவரை பத்திரமாக மீட்டு நாற்காலியில் அமர வைத்தனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் நிகழ்ச்சியின் பாதியிலேயே தனது முகாம் அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்றார்.
அதன் பின்னர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு தொடர்ந்து நடைபெற்றது. அரசு நிகழ்ச்சியில் பொதுமக்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் மயங்கி விழுந்தது திருவாரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.