திருவாரூர் மாவட்டம் அரித்துவாரமங்கலம் அருகே காவலர் மீது இளைஞர் ஒருவர் கத்தியால் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரித்துவார் மங்கலம் கடைத்தெரு பகுதியில் கத்தியை வைத்துக்கொண்டு அலம்பல் செய்த 24 வயது உடைய சூரியா என்ற வாலிபர் குறித்து பொதுமக்கள் அரித்துவார் மங்கலம் காவல் நிலையத்திற்கு தொலைபேசி வாயிலாக புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்றுக்கொண்டு அங்கு வந்த காவலர் மணிகண்டன் சூர்யாவை வீட்டுக்குப் போகும்படி கூறியுள்ளார்.
அப்போது, “என்னை கேட்க நீ யார்..?” என்று தன் கையில் வைத்திருந்த கத்தியை கொண்டு கழுத்து மற்றும் காதுமடல் பகுதியை கிழித்து உள்ளார் சூர்யா. பின்னர், அவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இது குறித்து அரித்துவாரமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
காவலர் தாக்கப்பட்ட சம்பவத்தால் அந்தப் பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு காவலர் மணிகண்டன் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.