தூத்துக்குடி அருகே கணவன் – மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், இரண்டே கால் வயது குழந்தையை சுவற்றில் அடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மேற்கு காமராஜ் நகர் பகுதியை சார்ந்த ஸ்டெபி (28). இவரது முதல் கணவர் கிஷோர் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இவர்களுக்கு கேத்ரினா என்னும் 2 1/4 வயது மற்றும் கிறிஸ்டினா (5) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக திருமண தகவல் மையம் மூலமாக டேவிட் (32) என்பவருடன் திருமணமாகி உள்ளது. டேவிட் தூத்துக்குடியில் வெல்டிங் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் டேவிட்டுக்கு ஸ்டெபிக்கு இடையே கடந்த சில நாட்களாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில், நேற்று இரவு குடி போதையில் வந்த டேவிட் ஸ்டேபியிடம் தகராறு செய்து சண்டை போட்டுள்ளார். இவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் ஸ்டெபியை கடுமையாக தாக்கியுள்ளார். அப்பொழுது தொட்டிலில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த ஸ்டெபியின் இரண்டாவது பெண் கேத்ரீனா 2 1/4 வயது குழந்தையை சுவற்றில் அடித்ததில், குழந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு குழந்தை உயிரிழந்தது.
இதை தொடர்ந்து, அவர்களின் குக்குரல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாளமுத்துநகர் காவல் ஆய்வாளர் ஜெயந்தி இறந்து கிடந்த பெண் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
பலத்த காயமடைந்த ஸ்டேபியை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தாளமுத்து நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து டேவிட்டை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனின் தந்தையான அல்லு அரவிந்த் தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழில்…
டாப் நடிகை தென்னிந்தியாவின் டாப் நடிகையாக சமீப காலங்களில் வலம் வருபவர் சமந்தா. கடந்த 2022 ஆம் ஆண்டு தனக்கு…
திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஹரி ஜோதி என்பவரின் இரண்டாவது மகன் அஜய்(22). இவர் நண்பர்களுடன்…
ரேஸர் அஜித்குமார் அஜித்குமார் தற்போது உலக நாடுகள் பலவற்றில் கார் பந்தயங்களில் மிகவும் தீவிரமாக ஈடுபாடு காட்டி வருகிறார். சில…
பீனிக்ஸ் விழான்? விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் “பீனிக்ஸ்”. இத்திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள…
அஜித் குமார் கொலைக்கு பிறகு தனிப்படையை அரசு கலைத்திருப்பது வரவேற்கத்தக்கது.மடப்புரத்தில் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். இதையும் படியுங்க: திமுக…
This website uses cookies.