ஸ்ரீவைகுண்டம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பூச்சிமருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள விட்டிலாபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் சேர்மன். இவர் மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றிருந்தார். மேலும், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவரது மனைவி ஞானபாக்கியம் (65). இவர்களுக்கு பாக்கியகோமதி (30) என்ற மகள் உள்ளார். இவருக்கு வேடசந்தூரைச் சேர்ந்த மாரியப்பன் என்பவருடன் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்து 7 வயதில் முத்து செல்வகோமு என்ற ஒரு மகன் உள்ளார்.
பாக்கியகோமதி கணவர் மாரியப்பன் வேலைக்காக வெளியூர் சென்றுள்ளதால் பாக்கியகோமதி தனது தாய் வீட்டில் மகனுடன் இருந்து வருகிறார். ஞானப்பாக்கியம் மற்றும் அவரது மகள் பாக்கியகோமதி இருவருமே உடலில் பல்வேறு நோயால் தினமும் அவதிப்பட்டு வந்துள்ளனர். நேற்று இருவருக்கும் நோய் தாக்கம் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வீட்டில் இருவரும் நேற்று இரவு கதறி துடித்துள்ளனர்.
இதற்கிடையில், அனைவரும் இரவு சாப்பிட்டு விட்டு தூங்க சென்றுள்ளனர். இதற்கிடையில் காலை எழுந்து பார்த்தபோது ஞானபாக்கியம் கணவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட அதே அறையில் ஞானபாக்கியம், பாக்கியகோமதி, அவரது மகன் முத்து செல்வகோமு ஆகிய மூவரும் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர்.
அருகில் எறும்பு மருந்து, நோய்க்காக அரசு மருத்துவமனையில் இருந்து இல்லம் தேடி மருத்துவத்திற்காக வாங்கி வைக்கப்பட்டிருந்த மாத்திரைகள் என அனைத்தையும் தண்ணீரில் போட்டு கரைத்து குடித்துள்ளது தெரிய வந்தது. உடனே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவர்கள் மூவரையும் மீட்டு தனியார் வாகனத்தில் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவல் செய்துங்கநல்லூர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நோய் கொடுமையால் தாய், மகள், பேரன் ஆகியோர் பூச்சிமருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.