தூத்துக்குடியில் 1 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை க்யூ பிரிவு போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடார சட்டமன்ற தொகுக்குட்பட்ட வாலசமுத்திரம் பகுதியில் க்யூ பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். ஓட்டுநர் ஆண்டி செல்வம் வாகனத்தை ஒட்டி வந்தார்.
சோதனையின் போது அடுக்கடுக்காக மூட்டை இருப்பதை சோதனை செய்ததில் அதில் 450 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. உடனடியாக க்யூ பிரிவு போலீசார், அந்த மூட்டையில் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
பின்னர், ஓட்டுநர் ஆண்டி செல்வத்தை உடனடியாக கைது செய்த போலீசார், வேறு யாருடனும் தொடர்பு இருக்கிறதா? என பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர். மேலும், கடல் வழியாக இலங்கைக்கு கடத்தப்பட உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் மதிப்பு சுமார் 1 கோடியே 30 லட்சம் என தெரிய வருகிறது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.