திமுக எம்பி ஆ. ராசா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் தூத்துக்குடி அதிமுக வழக்கறிஞர்கள் அணி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.
பாரத ரத்னா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் குறித்து அவதூறு கருத்தை தெரிவித்த திமுக எம்பி ஆ.ராசாவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், திருப்பூரில் இது தொடர்பாக கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
இந்த நிலையில், திமுக எம்பி ஆ.ராசா மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் அறிவுறுத்தலின்படி, கழக வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் ஐ.எஸ். இன்பதுரை வழிகாட்டுதலின்படி, மாநில வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் மைக்கேல் ஸ்டனிஸ் பிரபு தலைமையில் தூத்துக்குடி தென்பாக காவல் நிலையத்தில் அதிமுக வழக்கறிஞர்கள் அணி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆ. ராசா மீது சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அவர் பேசியதை பதிவேற்றம் செய்த யூடியூப் சேனல்களில் தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000ன்படி யூடியூப்பில் இருந்து அந்த வீடியோவை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.