தூத்துக்குடி திரேஸ்புரம் மேட்டுப்பட்டி கடற்கரை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டுப் படகுக்கு மர்ம நபர்கள் தீவைத்து எரித்த சம்பவத்தை கண்டித்து சங்கு குழி படகுகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
தூத்துக்குடி லூர்தம்மாள் புரம் பகுதியைச் சேர்ந்தவர் முனீஸ்வரன் மீனவர். இவருக்கு சொந்தமான நாட்டுப் படகில் நேற்று காலை கடலுக்குச் சென்று விட்டு படகை மேட்டுப்பட்டி கடற்கரையில் நிறுத்தி வைத்துள்ளார்.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு சுமார் 2 மணி அளவில், இவரது படகில் மர்ம நபர்கள் சிலர் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.
இதில் ரூபாய் 15 லட்சம் மதிப்பிலான முனீஸ்வரனுக்கு சொந்தமான நாட்டுப்படகு முற்றிலுமாக எரிந்து சேதமானது. இதைத் தொடர்ந்து, இன்று அதிகாலை அந்தப் பகுதியில் ஏராளமான மீனவர்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட முனீஸ்வரன் கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் மற்றும் மீன்வளத் துறையினர் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேட்டுப்பட்டி திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் படகு தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தால் சுமார் 300-க்கும் மேற்பட்ட சங்கு குழி மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.