தூத்துக்குடி அருகே உள்ள தருவைக்குளம் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த பட்டுராஜா என்பவரை தருவைகுளம் காவல்துறையினர் கைது செய்து அவரிடமிருந்து 1 கிலோ 400 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் தருவைக்குளம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) ஜின்னா பீர்முகமது தலைமையில் உதவி ஆய்வாளர் முத்துமாலை மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தருவைக்குளம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட தருவைக்குளம் to வெள்ளப்பட்டி கடற்கரை சாலை அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் தூத்துக்குடி இனிகோ நகரை சேர்ந்த பிளாரன்ஸ் மகன் பட்டுராஜா (37) என்பதும், அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
உடனடியாக போலீசார் குற்றவாளி பட்டுராஜாவை கைது செய்து அவரிடமிருந்த 1 கிலோ 400 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து தருவைக்குளம் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், கைது செய்யப்பட்ட குற்றவாளி பட்டுராஜா மீது ஏற்கனவே தென்பாகம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி உட்பட 6 வழக்குகளும், வடபாகம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், சூரங்குடி காவல் நிலையத்தில் ஒரு கஞ்சா வழக்கும் என தூத்துக்குடி மாவட்டம் முழுவதிலுல் உள்ள காவல் நிலையங்களில் மொத்தம் 8 வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டை அடுத்த களாம்பாக்கத்தைச் சேர்ந்த வாலிபர் தனுஷ் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயஸ்ரீ ஆகியோர் சமூக வலைதளம்…
பிச்சைக்காரராக தனுஷ் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று வெளியாகியுள்ள “குபேரா”…
திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் வெங்கத்தூர் கட்சி அலுவலகத்தில்வளர்ந்த இந்தியாவின் அம்ரித் கால் சேவை நல்லாட்சி ஏழைகளின் நலன்11…
தனுஷின் குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று…
திண்டுக்கல் தாடிக்கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் காவல்துறை அனுமதியுடன் கிளர்ச்சி பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதையும் படியுங்க:…
This website uses cookies.