தூத்துக்குடியில் சிப்ஸ் கடையில்ஜாங்கிரி தராததால் மதுபோதையில் இருந்த இரண்டு நபர்கள் கடைக்குள் புகுந்து ஊழியரை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி வீஇ ரோட்டில் நாகர்கோவிலைச் சேர்ந்த முருகன் என்பவர் ஸ்ரீ சிந்து என்ற பெயரில் சிப்ஸ் கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் தூத்துக்குடி அருகே உள்ள பழைய காயல் கிராமத்தைச் சேர்ந்த முருகன் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்த கடை அருகே அரசு மதுபான கடை ஒன்று செயல்படுகிறது.
இதனால், அங்கு மது அருந்திவிட்டு வரும் குண்டர்கள் அவ்வப்போது, இந்த சிப்ஸ் கடைக்கு சென்று பணம் கொடுக்காமல், கடையில் வேலை பார்க்கும் பெண் ஊழியர்களிடம் சிப்ஸ் மற்றும் இனிப்பு வகைகளை கேட்டு தொந்தரவு செய்வது வாடிக்கையாக இருந்துள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு அதே போன்று அரசு மதுபான கடையில் மது அருந்திவிட்டு, மது போதை தலைக்கேறிய நிலையில் வந்த அடையாளம் தெரியாத நான்கு நபர்கள், சிப்ஸ் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஊழியர் குமாரிடம் சென்று, பணம் கொடுக்காமல் ஜாங்கிரி கேட்டுள்ளனர். அதற்கு குமார் பணம் இல்லாமல் ஜாங்கிரி கொடுக்க முடியாது, உரிமையாளர் திட்டுவார் என கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து, போதையில் இருந்த நான்கு பேரும் குமாரை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர். கடையை விட்டு வெளியே வந்தால் அடித்து துவைத்து விடுவதாக கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து குமார் எதற்காக என்னை திட்டினீர்கள் என்று கேட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த போதை ஆசாமிகளில் இரண்டு நபர்கள் கடைக்குள் புகுந்து, ஊழியர் குமாரை கொடூரமாக தாக்கியுள்ளனர். இதைத்தொடர்ந்து, அந்த பகுதியில் இருந்த வியாபாரிகள் சிலர் உடனடியாக வந்து ஊழியர் குமாரை, மதுபோதையில் இருந்த நபர்களிடம் இருந்து காப்பாற்றினர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து காயம் அடைந்த ஊழியர் குமார் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட ஊழியர் குமார் மற்றும் ஐக்கிய வியாபாரிகள் சங்கம் ஆகியோர் தென்பாகம் காவல் நிலையத்தில் தாக்குதல் நடத்திய மது போதை கும்பலை கைது செய்ய கோரி புகார் அளித்துள்ளனர்.
தூத்துக்குடியில் மது போதையில் இருந்த கும்பல் ஜாங்கிரி தராததால் கடை ஊழியரை தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.