தூத்துக்குடி அருகே மது குடிக்க பணம் தராததால் தந்தையை கல்லால் தாக்கி மகன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள மாங்கொட்டாபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சிவன் மகன் பண்டாரம் (69), விவசாயி. இவருக்கு சந்தனமாரி என்ற மனைவியும், 5 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மகள்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. இவரது ஒரே மகன் வேல்முருகன் (25) என்பவருக்கு திருமணமாகவில்லை.
இந்நிலையில், நேற்று இரவு பண்டாரம் மாங்கொட்டாபுரத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது, வேல்முருகன் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அவர் பணம் தர மறுத்ததால் ஆத்திரம் அடைந்த அவர் கருங்கல்லை தந்தையின் தலையில் போட்டுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவரை ஸ்ரீவைகுண்டம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
இதுகுறித்து ஏரல் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி வழக்குப் பதிவு செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா வேல்முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார் .
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பஜார் வீதியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மற்றும் ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில்…
பல வருடக் கனவு கடந்த 2016 ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டிடத்தின் பணிகள் தொடங்கப்பட்டது. தென்னிந்திய…
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
This website uses cookies.