கோவில்பட்டி : தீபாவளி பண்டிகை முன்னிட்டு கோவில்பட்டி ஆட்டுச்சந்தையில் 7 கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனையாகியுள்ளது.
தமிழகத்தில் புகழ்பெற்ற ஆட்டுச்சந்தைகளில் மிகவும் முக்கியமான சந்தை தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள எட்டயபுரம் ஆட்டுச்சந்தை. வாரம் தோறும் சனிக்கிழமை நடைபெறும் இந்த ஆட்டுச்சந்தைக்கு மதுரை, சென்னை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடுகளை வாங்க வியாபாரிகள் வருவது வழக்கம்.
வழக்கமாக வாரம் தோறும் 2 கோடி ரூபாய் வரையிலும், பண்டிகை காலங்களில் 4 கோடி ரூபாய் வரையிலும் ஆடுகள் விற்பனை செய்யப்படுவது வழக்கம்.
நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், எட்டயபுரத்தில் இன்று நடைபெற்ற ஆட்டுச்சந்தை களைகட்டியது. நாளை மறுநாள் தீபாவளி என்பதால் விற்பனைக்கு அதிகளவில் ஆடுகள் கொண்டு வரப்பட்டு இருந்தது. 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ஆடுகள் வரை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தன.
விலையும் கடந்த வாரங்களை விட சற்று குறைவாக இருந்த காரணத்தினால் வியாபாரிகள் ஆர்வமுடன் ஆடுகளை வாங்கி சென்றனர். 7 ஆயிரம் முதல் 13 ஆயிரம் வரை ஆடுகள் எடைக்கு ஏற்ப இளம் ஆடுகள் அதிகளவில் இறைச்சிக்காக வியாபாரிகள் வாங்கி சென்றனர்.
கடந்த ஆண்டு தீபாவளி வியாபாரம் 6 கோடிரூபாயக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்தாண்டு 7கோடி ரூபாய் வரை வியாபாரம் நடைபெற்றுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.