தூத்துக்குடி : கோவில்பட்டி அருகே பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்தி, பொருட்களை சேதப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கீழநம்பியாபுரம் கிராமத்தில் இருக்கும் தொடக்கப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக குருவம்மாள் மற்றும் உள்ளிட்ட ஆசிரியர்கள் இங்கு பணியாற்றி வருகின்றனர்.
இதே பகுதியைச் சேர்ந்த இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை தலைமை ஆசிரியர் குருவம்மாள் கண்டித்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் அவர்களது உறவினர்களை வரவழைத்து, பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியர் குருவம்மாள் மற்றும் இடைநிலை ஆசிரியர் பாரத்தை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இது தொடர்பாக எட்டயபுரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தப்பி ஓடிய குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
கரூர், தென்னிலை அருகே, இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, கூலி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து…
17 வயது சிறுவனை வற்புறுத்தி உல்லாசமாக இருந்த 32 வயது பெண்ணை போலீசார் கைது செய்தனர். நெல்லை நாங்குநேரி அடுத்த…
கலவையான விமர்சனம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள…
ரசிகர்கள் வரவேற்பு அதர்வா நடிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நேற்று “குபேரா” படத்துடன் மோதிய திரைப்படம் “DNA”. இதில் அதர்வாவுக்கு…
This website uses cookies.