தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் தனது வருத்தத்தை தெரிவிக்க வேண்டும் என ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தை சேர்ந்த பேராசிரியை பாத்திமா பாபு தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது :- ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தை கலவரமாக மாற்றியது யார் என்பது அனைவருக்கும் தெரியும். துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
ஆனால், தூத்துக்குடி கலவரம் பற்றி நொடிக்கு நொடி காவல்துறை சார்பில் அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக ஒரு நபர் ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, யாராக இருந்தாலும் அவர்களுக்கு என்ன விதமான அரசியல் பின்புலம் இருந்தாலும், அவர்கள் மீது விசாரணை நடத்தி அவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும்.
மேலும், பொதுமக்கள் தான் காவல்துறையினரை தாக்கியதாக நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். ஆனால், ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தவறுகள் அனைத்தும் காவல்துறை என கூறியுள்ளது. இதனால், நடிகர் ரஜினிகாந்த் தனது வருத்தத்தை தெரிவிக்க வேண்டும், என அவர் கேட்டுக்கொண்டார்.
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
This website uses cookies.