தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் தனது வருத்தத்தை தெரிவிக்க வேண்டும் என ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தை சேர்ந்த பேராசிரியை பாத்திமா பாபு தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது :- ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தை கலவரமாக மாற்றியது யார் என்பது அனைவருக்கும் தெரியும். துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
ஆனால், தூத்துக்குடி கலவரம் பற்றி நொடிக்கு நொடி காவல்துறை சார்பில் அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக ஒரு நபர் ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, யாராக இருந்தாலும் அவர்களுக்கு என்ன விதமான அரசியல் பின்புலம் இருந்தாலும், அவர்கள் மீது விசாரணை நடத்தி அவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும்.
மேலும், பொதுமக்கள் தான் காவல்துறையினரை தாக்கியதாக நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். ஆனால், ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தவறுகள் அனைத்தும் காவல்துறை என கூறியுள்ளது. இதனால், நடிகர் ரஜினிகாந்த் தனது வருத்தத்தை தெரிவிக்க வேண்டும், என அவர் கேட்டுக்கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
This website uses cookies.