தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வெள்ளம் சூழந்துள்ளதால் உடற்கூராய்வு செய்யும் உடல்களை பிணவறையில் வைக்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 3 தினங்களுக்கு முன்பு பெய்த அதீத கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டம் வெள்ளத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏரிகள், குளங்களில் உடைப்பு ஏற்பட்டதால் நகர்ப்புறங்களை வெள்ள நீர் சூழந்தது. மேலும், குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்து பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாக்கியுள்ளது. மேலும், வெளியே வர முடியாத அளவுக்கு வெள்ளம் சூழ்ந்ததால் அடிப்படை தேவைகள் கூட கிடைக்காமல் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதனிடையே, தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை மத்திய குழு இன்று ஆய்வு செய்தது. தொடர்ந்து, முதலமைச்சர் ஸ்டாலின் நாளை ஆய்வு செய்ய உள்ளார். இந்த நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனை இன்னமும் வெள்ளத்தில் இருந்து மீண்டு வரவில்லை. வெள்ள நீர் இன்னும் வடியாததால் போதிய இடவசதியில்லாமல், உடற்கூராய்வு செய்யும் உடல்களை பிணவறையில் வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மூன்றுக்கும் மேற்பட்ட உடல்களை ஒரே ஆம்புலன்ஸில் நெல்லை அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இறந்தவர்களின் உறவினர்கள் கண்ணீரோடு மருத்துவமனையில் காத்திருக்கின்றனர்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.