தஞ்சை ; ஶ்ரீவைகுண்டம் அருகே ஏரல் ஹோட்டலில் நடந்த தகராறில் சப்ளையர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூரை சேர்ந்த ராசு என்பவரது மகன் சேகர் (64). இவர் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பஸ்நிலையத்தில் உள்ள ஹோட்டலில் பணிபுரிந்து வருகிறார். அதே ஹோட்டலில் களக்காடு பகுதியை சேர்ந்த சிவசூரியன் (25) என்பவரும் பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவரும் ஹோட்டலிலேயே இரவு நேரத்தில் தங்கி வந்துள்ளனர்.
இந்நிலையில், சிவசூரியன் நேற்று நள்ளிரவில் மதுபோதையில் ஹோட்டலுக்கு வந்ததால் சேகர் சத்தம் போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிவசூரியன் அங்கிருந்த கம்பால் சேகரை தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஏரல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சேகர் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மதுபோதையில் இருந்த சிவசூரியனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
This website uses cookies.