“கலப்பு திருமணம் செய்தால் கொலை செய்துவிட்டு ஜெயிலுக்குப் போவோம், இதை கட்டாயம் செய்வோம்” என ராமநாதபுரம் இளைஞர்கள் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த ‘லோகேஷ் முத்தரையர்’என்பவருடைய சமூக வலைதள பக்கத்தில் நான்கு ஐந்து இளைஞர்கள் ஒன்று கூடி தங்களுடைய இயக்கக் கொடி மற்றும் பதாகையை கையில் பிடித்தவாறு ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தொடர்ச்சியாக அவர்கள் சார்ந்த சமுதாயத்தில் கலப்பு திருமணங்கள் நடைபெற்று வருவதாகவும், இனியும் கலப்புத் திருமணத்தை ஆதரிக்க மாட்டோம் எனவும், அவ்வாறு மீறி கலப்புத் திருமணம் செய்பவரை கட்டாயம் கொலை செய்வோம் என்றும், கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு செல்வதை பெருமையாக கருதுவதாக அந்த வீடியோவில் கூறியிருந்தனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
எனவே, இதுபோன்ற அச்சுறுத்தும் வகையில் வீடியோ வெளியிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் அச்சத்தை போக்க வேண்டும். மேலும், காதலித்து கலப்புத் திருமணம் செய்பவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.