“கலப்பு திருமணம் செய்தால் கொலை செய்துவிட்டு ஜெயிலுக்குப் போவோம், இதை கட்டாயம் செய்வோம்” என ராமநாதபுரம் இளைஞர்கள் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த ‘லோகேஷ் முத்தரையர்’என்பவருடைய சமூக வலைதள பக்கத்தில் நான்கு ஐந்து இளைஞர்கள் ஒன்று கூடி தங்களுடைய இயக்கக் கொடி மற்றும் பதாகையை கையில் பிடித்தவாறு ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தொடர்ச்சியாக அவர்கள் சார்ந்த சமுதாயத்தில் கலப்பு திருமணங்கள் நடைபெற்று வருவதாகவும், இனியும் கலப்புத் திருமணத்தை ஆதரிக்க மாட்டோம் எனவும், அவ்வாறு மீறி கலப்புத் திருமணம் செய்பவரை கட்டாயம் கொலை செய்வோம் என்றும், கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு செல்வதை பெருமையாக கருதுவதாக அந்த வீடியோவில் கூறியிருந்தனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
எனவே, இதுபோன்ற அச்சுறுத்தும் வகையில் வீடியோ வெளியிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் அச்சத்தை போக்க வேண்டும். மேலும், காதலித்து கலப்புத் திருமணம் செய்பவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.