தூத்துக்குடி முள்ளக்காடு அருகே தாயுடன் தொடர்பில் இருந்ததால் ஆத்திரமடைந்த மகன்கள், உப்பள தொழிலாளியை வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பியோடி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி முள்ளக்காடு ராஜீவ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் உப்பள தொழிலாளி முனியசாமி. இவரது மனைவி மனநலம் பாதிக்கப்பட்டவர். இந்நிலையில் முனியசாமிக்கும், அதே பகுதியில் வசித்து வந்த கணவனை இழந்த நிர்மலா என்ற பெண்ணிற்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த தொடர்பு நிர்மலாவின் மகன்களான சதீஷ் மற்றும் சுதாகருக்கு தெரிய வர, கடந்த சில மாதங்களுக்கு முன்பு முனியசாமியை கண்டித்ததாக கூறப்படுகிறது. ஆனால் முனியசாமி தொடர்ந்து நிர்மலாவை பார்ப்பதற்காக அவர் வீட்டிற்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில், முனியசாமி நேற்று மாலை தனது சைக்கிளில் சாமி நகர் பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது, அங்கே வந்த சதீஷ் மற்றும் சுதாகர், முனியசாமியை சைக்கிளிலிருந்து கீழே தள்ளி அவரது கழுத்தில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே முனியசாமி பரிதாபமாக இருந்தார்.
இதை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த முத்தையாபுரம் காவல்துறையினர் முனியசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முனியசாமி கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, அந்தப் பகுதியில் கூடிய முனிசாமியின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதி மக்கள், முத்தையாபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா மற்றும் பல்வேறு போதைகள் காரணமாக குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி காவல்துறையினரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், குற்றவாளிகளை உடனே கைது செய்யாவிட்டால் உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் கூறினார்கள்.
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
This website uses cookies.