தூத்துக்குடி முள்ளக்காடு அருகே தாயுடன் தொடர்பில் இருந்ததால் ஆத்திரமடைந்த மகன்கள், உப்பள தொழிலாளியை வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பியோடி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி முள்ளக்காடு ராஜீவ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் உப்பள தொழிலாளி முனியசாமி. இவரது மனைவி மனநலம் பாதிக்கப்பட்டவர். இந்நிலையில் முனியசாமிக்கும், அதே பகுதியில் வசித்து வந்த கணவனை இழந்த நிர்மலா என்ற பெண்ணிற்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த தொடர்பு நிர்மலாவின் மகன்களான சதீஷ் மற்றும் சுதாகருக்கு தெரிய வர, கடந்த சில மாதங்களுக்கு முன்பு முனியசாமியை கண்டித்ததாக கூறப்படுகிறது. ஆனால் முனியசாமி தொடர்ந்து நிர்மலாவை பார்ப்பதற்காக அவர் வீட்டிற்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில், முனியசாமி நேற்று மாலை தனது சைக்கிளில் சாமி நகர் பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது, அங்கே வந்த சதீஷ் மற்றும் சுதாகர், முனியசாமியை சைக்கிளிலிருந்து கீழே தள்ளி அவரது கழுத்தில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே முனியசாமி பரிதாபமாக இருந்தார்.
இதை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த முத்தையாபுரம் காவல்துறையினர் முனியசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முனியசாமி கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, அந்தப் பகுதியில் கூடிய முனிசாமியின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதி மக்கள், முத்தையாபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா மற்றும் பல்வேறு போதைகள் காரணமாக குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி காவல்துறையினரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், குற்றவாளிகளை உடனே கைது செய்யாவிட்டால் உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் கூறினார்கள்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.