தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் இரவு நேரங்களில் வீட்டு முன்பு நிறுத்தி வைக்கப்படும் ஆட்டோக்களில் பேட்டரியை திருடும் காட்சிகள் சமூக வளைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்படும் இருசக்கர வாகனங்கள் திருட்டு போவதாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன.
இந்த நிலையில், தூத்துக்குடி அண்ணா நகர் 11வது தெருவில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ ஒன்றில் அந்த பகுதியில் வந்த நபர் ஒருவர் தலையில் துணியை கொண்டு மூடியபடி ஆட்டோவில் இருந்த பேட்டரியை கலட்டி எடுத்து செல்லும் காட்சிகள் சமூக வளைதலங்களில் வைரலாக பரவி வருகின்றது.
மேலும், இரவு நேரங்களில் இதுபோல் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை போலீசார் கைது செய்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
This website uses cookies.