தூத்துக்குடியில் முன்னாள் குமாஸ்தா தலை துண்டித்து படுகொலை செய்த சம்பவத்தில் குற்றவாளிகளை சினிமா காட்சி போல விரட்டி சென்று தனிப்படை போலீசார் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி கிரேட் காட்டன் ரோடு பழைய தொழிற்பேட்டை உள்ளே 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டு கிடப்பதாக நள்ளிரவு மத்திய பாகம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் அலெக்ஸ்ராஜ் தலைமையிலான போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர்.
மேலும் படிக்க: வார இறுதியில் சற்று ஆறுதல் அளிக்கும் தங்கம்… சவரனுக்கு ரூ.160 குறைவு…!!
அங்கு தூத்துக்குடி குருஸ்புரத்தைச் சேர்ந்த முன்னாள் குமாஸ்தாவாகவும், தற்போது நில புரோகராகவும் இருந்து வரும் பால்ராஜ் (60) கழுத்து உள்ளிட்ட இடங்களில் அரிவாளால் வெட்டப்பட்டு தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
இந்நிலையில், கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்வதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, எஸ்.பியின் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு தலைமையிலான போலீசார் அவர்களை தூத்துக்குடி நெல்லை பைபாஸ் சாலையில், அதிகாலை வேளையில் போலீஸ் வாகனத்தில் விரட்டிச் சென்றனர்.
சினிமா காட்சி போல இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை பின் தொடர்ந்து நீண்ட நேரம் விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர். போலீசார் தங்களை விரட்டி வருவதை அறிந்து அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் சாலையில் சறுக்கி விழுந்ததில் அவர்களுக்கு கை முறிவு ஏற்பட்டது. இந்நிலையில் ராஜபிரபு தலைமையிலான போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி முத்து கிருஷ்ணா புரத்தைச் சேர்ந்த கந்தசுப்பிரமணியன் மற்றும் தூத்துக்குடியில் வசித்து வரும் மதுரையை சேர்ந்த ஜெயராம் என்பது தெரிய வந்தது. இவர்கள் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் பால்ராஜை அரிவாளால் வெட்டி கொலை செய்ததும் தெரிய வந்தது.
இந்தக் கொலையில் இவர்கள் இருவரை தவிர வேறு யாருக்கும் தொடர்பு உண்டா? கொலைக்கான காரணம் இது மட்டும்தானா..! என்பது குறித்து தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.