தூத்துக்குடியில் உள்ள உலகப் புகழ் பெற்ற பனிமயமாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் பனிமய மாதா பவனி நடைபெற்றது.
தூத்துக்குடியில் உள்ள உலகப் புகழ்பெற்ற பனிமயமாதா பேராலயே திருவிழா கடந்த 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலையும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. 10ம் நாள் திருவிழாவை முன்னிட்டு பன்மய மாதா அன்னை சப்பர பவனி நேற்று நடைபெற்றது.
மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் பனிமயமாதா அன்னை பவனி வந்தார். இப்பவனி பேராலய வளாகத்தை சுற்றி வந்தது. சிங்கப்பூர் மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் வெளிமாநிலத்தில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.
மேலும், 11ம் திருவிழாவான இன்று காலை 7 மணிக்கு மறை மாவட்ட ஆயர் ஸ்டிபன் அந்தோணி தலைமையில் திருவிழா திருப்பலி நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆகஸ்ட் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவிழாவில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்களிடம் சமத்துவத்தை ஏற்படுத்தும் வகையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விழாவை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் சுமார் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.