தூத்துக்குடி ; ஓட்டப்பிடாரம் அருகே புளியம்பட்டியில் குடும்ப பிரச்சனை காரணமாக போலீஸ் ஏட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓட்டப்பிடாரம் அருகே புளியம்பட்டி காவல் நிலையம் அருகில் உள்ள காவலர் குடியிருப்பில் போலீஸ் ஏட்டு கொடிவேல் (40) என்பவர் மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். மேலும், இவர் விளாத்திகுளம் அருகில் உள்ள குளத்தூர் காவல் நிலையத்தில் ஏட்டாக உள்ள இவர், அயல் பணி காரணமாக புளியம்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்துள்ளார் .
இந்நிலையில், நேற்று இரவு வீட்டில் இருந்த கொடிவேல் திடீரென அவரது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து செய்துள்ளார். மேலும், இதுகுறித்து தகவல் அறிந்து புளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஏட்டு கொடிவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், கொடிவேல் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மணியாச்சி டிஎஸ்பி லோகேஸ்வரன் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.
காவலர் குடியிருப்பில் ஏட்டு ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுகுழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் மாவட்டத்தலைவர் வெங்கடேசன்,…
மனதை கவர்ந்த நடிகை :”அருவி” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அதிதி…
சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
This website uses cookies.