தூத்துக்குடி ; ஓட்டப்பிடாரம் அருகே புளியம்பட்டியில் குடும்ப பிரச்சனை காரணமாக போலீஸ் ஏட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓட்டப்பிடாரம் அருகே புளியம்பட்டி காவல் நிலையம் அருகில் உள்ள காவலர் குடியிருப்பில் போலீஸ் ஏட்டு கொடிவேல் (40) என்பவர் மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். மேலும், இவர் விளாத்திகுளம் அருகில் உள்ள குளத்தூர் காவல் நிலையத்தில் ஏட்டாக உள்ள இவர், அயல் பணி காரணமாக புளியம்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்துள்ளார் .
இந்நிலையில், நேற்று இரவு வீட்டில் இருந்த கொடிவேல் திடீரென அவரது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து செய்துள்ளார். மேலும், இதுகுறித்து தகவல் அறிந்து புளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஏட்டு கொடிவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், கொடிவேல் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மணியாச்சி டிஎஸ்பி லோகேஸ்வரன் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.
காவலர் குடியிருப்பில் ஏட்டு ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.