தூத்துக்குடி அருகே உரம் ஏற்றி வந்த லாரியில் கயிறு பிரிந்து வந்ததால் எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரின் கழுத்தில் சுற்றி தூக்கி வீசப்பட்ட காட்சிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியை சேர்ந்தவர் சங்கரசுப்பு. இவரது மகன் முத்து (30). இவர் இன்று இருசக்கர வாகனத்தில் ஏரல் நோக்கி வரும்பொழுது, எதிரே வந்த உரம் ஏற்றி வந்த லாரியின் ஒரு மூட்டை சரிந்து கீழே விழுந்தது.
அப்போது, அதில் இருந்த கயிறு இருசக்கர வாகனத்தில் வந்த முத்துவின் கழுத்தில் சுற்றி கீழே இழுத்துப் போட்டது. இதனால், அவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்து, ஆம்புலன்ஸ் சீக்கிரமாக வந்த காரணத்தினால், தூத்துக்குடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
லாரி ஓட்டுநரின் அலட்சியத்தால் சாலையில் எதிரே சென்ற வாகன ஓட்டி தூக்கி வீசப்பட்ட சம்பவம் குறித்த சிசிடிடி காட்சிகள் வெளியாகியுள்ளது.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.