தூத்துக்குடியில் நடுரோட்டில் சென்று கொண்டிருந்த கார் தீடீரென்று தீப்பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி அபிராமி நகர் பகுதியை சார்ந்த சிவில் இன்ஜினியர் இளங்கோ என்பவர் தனது குடும்பத்தினருடன் லயன்ஸ் டவுன் பகுதியில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு காரில் சென்றார். பின்னர், அங்கிருந்து தூத்துக்குடி பீச் ரோட்டில் புதுப்பொலிவுடன் உள்ள முத்துநகர் கடற்கரைக்கு செல்ல தனது குடும்பத்தினருடன் சவுத் காட்டன் ரோடு பகுதியில் காரில் வந்துள்ளார்.
அப்போது, காரின் எதிர்புறம் வந்த பொதுமக்கள் காரில் இருந்து தீப்பொறி வருவதாக கூறியவுடன், காரை ஓரமாக நிறுத்திவிட்டு, அவரும், அவரது குடும்பத்தினரும் அலறியடித்துக்கொண்டு காரில் இருந்து இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
அதற்குள் கார் எஞ்சின் பகுதியில் தீ மளமளவென்று பரவவே அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்தும் அணையாததால் தீயணைப்புத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட தீயணைப்புத்துறையினர் சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். அதற்குள் கார் கார் முற்றிலும் எரிந்து நாசமானது.
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தெற்கு காவல்நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலிசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…
தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…
ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…
கோவை புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே…
நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா தெலுங்கு படத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டார்.…
This website uses cookies.