தூத்துக்குடி ; திருமாஞ்சி நகரில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கணவர் கட்டையால் தலையில் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே உள்ள திருமாஞ்சி நகரைச் சார்ந்த ஜான்ராஜ் மகன் இம்மானுவேல் அப்துல்லா. அவரது மனைவி கன்னித்தாய். இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து 5 வருடம் ஆகிறது.
இவர்களுக்கு சையது அலி பாத்திமா, கதீஜா பிஸ்மி என இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், மனைவி வேறு ஒரு நபருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டு, கணவர் அடிக்கடி சண்டையிட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று மீண்டும் இருவருக்கும் நடைபெற்ற தகராறில் மனைவி கன்னித்தாயை இமானுவேல் அப்துல்லா கட்டையால் தலையில் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து உயிரிழந்தார்.
இதை தொடர்ந்து, முத்தையாபுரம் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய இமானுவேல் அப்துல்லாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.