தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கந்து வட்டி கொடுமையால் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி, விளாத்திகுளம் நாடார் வீதி பகுதியை சேர்ந்தவர் முனியசாமி மனைவி பத்மாதேவி (40), தற்போது கணவரை பிரிந்து வாழும் இவர், அப்பகுதியை சேர்ந்தவரிடம் 2017ம் ஆண்டு 4 லட்சம் ரூபாய் வட்டிக்கு வாங்கியதில், இதுவரை மாதம் 12 ஆயிரம் ரூபாய் வீதம், 7 லட்சம் ரூபாய் வட்டி செலுத்தி உள்ளார்.
இந்நிலையில், மீண்டும் 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வட்டி பணம் கேட்டு மிரட்டி வருவதாகவும், தொடர்ந்து தனது வீட்டையும் அபகரித்துக் கொண்டதாகவும் கூறிய அவர், தன்னை அவர் தொடர்ந்து தவறான முறையில் போனில் பேசி வருவதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கையில் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெய் கேனை தலையில் ஊற்றி தீ வைக்க முயன்றார்.
உடனே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தி, கேனை பறிமுதல் செய்ததுடன் தலையில் தண்ணீரை ஊற்றினர். பின்னர், அவரை அழைத்துக்கொண்டு சிப்காட் காவல் நிலையத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆக்சன் அதகளம்… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது. முழுக்க…
விஜய் டிவியில் கலகலப்பான தொகுப்பாளராக வலம் வந்தவர் பிரியங்கா தேஷ்பாண்டே. ஆரம்பத்தில ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர்,…
கணவருடன் ஏற்பட்ட பிரச்னையால் கயல் சீரியல் நடிகை தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சன் டிவியில் பிரைம்…
சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் வெளியான படம் ரெட்ரோ. சூர்யாவின் கங்குவா படத்திற்கு பிறகு…
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
This website uses cookies.