தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கந்து வட்டி கொடுமையால் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி, விளாத்திகுளம் நாடார் வீதி பகுதியை சேர்ந்தவர் முனியசாமி மனைவி பத்மாதேவி (40), தற்போது கணவரை பிரிந்து வாழும் இவர், அப்பகுதியை சேர்ந்தவரிடம் 2017ம் ஆண்டு 4 லட்சம் ரூபாய் வட்டிக்கு வாங்கியதில், இதுவரை மாதம் 12 ஆயிரம் ரூபாய் வீதம், 7 லட்சம் ரூபாய் வட்டி செலுத்தி உள்ளார்.
இந்நிலையில், மீண்டும் 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வட்டி பணம் கேட்டு மிரட்டி வருவதாகவும், தொடர்ந்து தனது வீட்டையும் அபகரித்துக் கொண்டதாகவும் கூறிய அவர், தன்னை அவர் தொடர்ந்து தவறான முறையில் போனில் பேசி வருவதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கையில் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெய் கேனை தலையில் ஊற்றி தீ வைக்க முயன்றார்.
உடனே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தி, கேனை பறிமுதல் செய்ததுடன் தலையில் தண்ணீரை ஊற்றினர். பின்னர், அவரை அழைத்துக்கொண்டு சிப்காட் காவல் நிலையத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திமுக அரசுக்கு எதிராக விவசாயிகளுடன் இணைந்து அதிமுக உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளது. இதையும் படியுங்க: மாயமான 28 வயது பெண்…
நயன்தாரா VS தனுஷ் கடந்த நவம்பர் மாதம் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வு “நயன்தாரா பியாண்ட் தி ஃபேரி டேல்”…
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்ன குளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்லம்மாள்(65), அவரது மகள் காளீஸ்வரி (45), காளீஸ்வரியின் மகள்…
ஆர்யாவுக்குச் செந்தமான உணவகங்கள் தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளாக கதாநாயகனாக வலம் வருபவர் ஆர்யா. தொடக்கத்தில் பல திரைப்படங்கள் அவரது…
நடிகர் ஆர்யா ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கத்தில் வெளியான உள்ளம் கேட்குமே படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். என்னதான் அந்த படத்தில்…
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
This website uses cookies.