Categories: தமிழகம்

ஆசிரமத்தில் இருந்தவர்கள் மனநோயாளிகளே இல்லை.. அரங்கேறிய பாலியல் வன்கொடுமை : வெளியான பகீர் ரிப்போர்ட்!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள குண்டலப்புலியூரில் இயங்கிய அன்பு ஜோதி ஆசிரமத்தில் கடந்த மாதம்10ம் தேதி ஆசிரமத்தில் மனநல பாதிக்கப்பட்டவர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்ததாகவும் பல்வேறு புகார்கள் எழுந்தது.

இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அன்புஜோதி ஆசிரமம் நிர்வாகி ஜூபின் பேபி அவரது மனைவி மரியா ஜூபின் ஆகிய 9 பேரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டன.

மேலும் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டன. இந்த ஆசிரமத்தில் தங்க வைத்தவர்கள் அனைவரும் பாதுகாப்பாக ஒரு சிலர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் பலர் சென்னையில் உள்ள அரசு காப்பகத்திலும் சேர்க்கப்பட்டன.

இந்த நிலையில் இன்று இது தொடர்பாக தேசிய குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர் ஜி ஆனந்த் அன்பு ஜோதி ஆசிரமத்தில் ஆய்வு மேற்கொண்டு நிர்வாகிகள் ஆய்வு சீல் வைத்தனர்.

மேலும் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தங்க வைத்துள்ள பாதிக்கப்பட்டவரை பார்வையிட்டு விசாரணை நடத்தி வந்தார்.

பின்னர் இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் தேசிய குழந்தை நல ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர் ஜி ஆனந்த் தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டன.

இதில் ஆர்டிஓ பரமேஸ்வரி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் தங்கவேல், சமூக நல அலுவலர் ராஜாம்பாள், சிபிசிஐடி போலீசார் ரேவதி மற்றும் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் இதுகுறித்து தேசிய குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர் ஜி ஆனந்த் செய்தியாளரிடம் கூறுகையில்
அன்பு ஜோதி ஆசிரமத்தில் ஆய்வு மேற்கொண்டு இரு அறைக்கு சீல் வைக்கப்பட்டன.

மேலும் நாங்கள் விசாரணை மேற்கொண்டதில் அன்பு ஜோதி ஆசிரமத்தில் பத்து சதவீதம் கூட மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கிடையாது.

அவர்கள் அனைவரும் போதை மாத்திரை கொடுத்து மனநல பாதிக்கப்பட்டவர்கள் என சித்தரிக்கப்பட்டவர்கள். அங்குள்ள அனைவருக்கும் போதை மாத்திரை கொடுத்து போதைக்கு அடிமையாக்கப்பட்டவர்கள், மேலும் அங்குள்ள பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டுள்ளனர்.

தற்பொழுது 15 பேர் மாயமாகி உள்ளனர். அவர்கள் எங்கு உள்ளனர், எங்கே போனார்கள் என சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றன.

மேலும் சிபிசிஐடி போலீசாருக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து காப்பகத்தில் பணியாளர்களை விசாரிக்க உத்தரவிட்டப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து போதை மாத்திரை எங்கிருந்து இவர்களுக்கு வந்தது என்பது குறித்தும் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வருக்கு 15 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுவரை அந்த ஆசிரமத்தில் இருந்து 35 ஆயிரம் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன, அன்பு ஜோதி ஆசிரமத்தில் சுற்றித் திரிபவர்கள் பலரை அழைத்து வந்து போதை மாத்திரை கொடுத்து அவர்கள் இருட்டறையில் வைத்து கட்டாய மதமாற்றம் செய்துள்ளனர் என்பது எங்கள் விசாரணையில் தெரியவந்துள்ளன.

இவர்கள் தனியாக செய்ய முடியாது இவர்கள் கூட யார் யார் தொடர்பு உள்ளார்கள் என்பது குறித்தும் மேலும் மத மாற்றம் செய்வதால் இவர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்பது குறித்தும் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளோம்.

இதுகுறித்து ஒரு பெண் மற்றும் அவரது பிள்ளையிடம் நாங்கள் விசாரணை மேற்கொண்ட பொழுது கட்டாய மதமாற்றம் செய்தது உறுதிப்படுத்தப்பட்டது.

மேலும் சிபிசிஐடி போலீசார் ஒருபுறம் விசாரணை நடத்தி வருகின்றன. தொடர்ந்து விசாரணைக்கு பிறகு முழு அறிக்கையை சமர்ப்பிக்க சொல்லி உள்ளோம் இதுபோல் தமிழகத்தில் சமீப காலமாக ஒரு சில இடங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

இதனை ஆய்வு மேற்கொண்டு தடுக்கும் நடவடிக்கையில் குழந்தைகள் நலத்துறை மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .

இதில் முழு விசாரணைக்குப் பிறகு அனைத்து விதமான நடவடிக்கைகளும் நாங்கள் எடுக்க தயாராக உள்ளோம். இவர்கள் கொடுக்கும் அறிக்கைக்கு பிறகு டெல்லியில் நாங்கள் இதுகுறித்து முழுமையான தகவலையும் தெரிவிப்போம் என்றார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

19 hours ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

19 hours ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

20 hours ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

21 hours ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

21 hours ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

22 hours ago

This website uses cookies.