திருவாரூரில் நடந்த விவசாயிகள் குறைதீர்ப்பு முகாமில் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என்று விவசாயி பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், பேசிய நன்னிலத்தைச் சேர்ந்த விவசாயி சேதுராமன் என்பவர், கனமழையின் காரணமாக நன்னிலம் ஒன்றியத்திற்குட்பட்ட அதம்பாவூர், நெம்மேலி, ஜெகநாதபுரம் உள்ளிட்ட 12 கிராமங்களில் உள்ள ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள குறுவை நெற்பயிர்கள், கனமழையின் காரணமாக வயல்களில் தேங்கியுள்ள நீரின் காரணமாக பாதிக்கப்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாக கூறினார்.
ஏற்கனவே இரண்டு நாட்களாக வயலில் நீர் தேங்கியுள்ளதாகவும், மேலும் இரண்டு நாட்கள் வயலில் நீர் தேங்கி இருந்தால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படக்கூடிய சூழ்நிலை நிலவும் என்றும், வயல்களில் இருந்து நீரை வெளியேற்றும் பெரிய ஓடை வாய்க்காலில் வெங்காய தாமரை அடைத்துள்ளதால் தண்ணீரை வெளியேற்ற முடியவில்லை என பேசினார். இதற்கு இந்த பெரிய குடை வாய்க்கால் சரியாக தூர்வாரப்படாதே காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், அவர் பேசும் போது அதிகாரிகள் இதுவரை அந்த இடத்தை வந்து பார்க்கவில்லை என்றும், நன்னிலம் வட்டாட்சியர் இதுவரை அந்த இடத்திற்கு வரவில்லை என்றும் ஆதங்கத்துடன் பேசினார். வேறு வழியில்லாமல் விவசாயிகள் நாங்களே பொக்லைன் இயந்திரத்தை ஏற்பாடு செய்து சுத்தம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.
பொதுப்பணித்துறை சார்பில் ஆறு ஆட்களை மட்டும் பணிக்கு அனுப்பியதாகவும் குற்றச்சாட்டு கூறினார். இதே நிலை நீடித்தால் நாங்கள் தற்கொலை செய்து கொள்ள வேற வழியில்லை என்று பேசினார். இதற்கு ஆட்சியர் அப்படியெல்லாம் சொல்லக்கூடாது, உங்கள் ஆதங்கம் எனக்கு புரிகிறது. ஓரிரு நாட்களில் முழுவதுமாக வயலில் இருந்து தண்ணீர் வெளியேற்றும் அளவிற்கு வெங்காய தாமரைகள் அகற்றப்படும், என உறுதியளித்தார்.
மேலும், ஆட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் ஆறு ஆட்களை வைத்து வெங்காயத் தாமரைகளை அகற்ற முடியுமான்னு தெரியவில்லை. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வாய்க்காலில் பொதுப்பணித்துறை தான் இயந்திரத்தின் மூலம் சுத்தம் செய்ய வேண்டும், மக்கள் மீது அதை திணிக்க கூடாது என்று கூறியதுடன், இரண்டு நாட்களில் வெங்காய தாமரை முழுவதுமாக அகற்றி எனக்கு புகைப்படம் எடுத்து வாட்ஸ் அப்பில் அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
மேலும் வலங்கைமான் பகுதியை சேர்ந்த ஒரு விவசாயி ஒருவர் கூறும்போது அரசு கொடுக்கும் இலவச வேட்டி சேலையை யாரும் பயன்படுத்துவதில்லை எனவே அதற்கு பதில் இலவச கொசுவலை கொடுத்தால் உபயோகமாக இருக்கும் என்றும் பேசினார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.