Categories: தமிழகம்

வாய்க்காலில் மிதந்த ஆயிரக்கணக்கான ஆணுறைகள்.. விவசாயிகள் அதிர்ச்சி : விசாரணையில் பகீர்!!!

வாய்க்காலில் மிதந்த ஆயிரக்கணக்கான ஆணுறைகள்.. விவசாயிகள் அதிர்ச்சி : விசாரணையில் பகீர்!!!

திருச்சி மாவட்டம் சமயபுரத்திலிருந்து ஜெயங்கொண்டம் செல்லும் புதிய தேசிய நெடுஞ்சாலையில் மாடக்குடி பேருந்து நிறுத்தம் பகுதியில் சாலையோரத்தில் விவசாய நிலத்திற்கு தண்ணீர் செல்லும் வாய்க்காலில் ஆயிரக்கணக்கான காலாவதி ஆகாத ஆணுறைகள் தண்ணீரில் வீசப்பட்டு மிதக்கின்றன.

அந்த ஆணுறைகளில் அரசு முத்திரை பொறிக்கப்பட்டிருப்பதால் அரசு மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு இலவசமாக கொடுக்க வழங்கப்பட்டதாக தெரிகிறது.

பல ஆயிரம் மதிப்புடைய ஆணுறைகள் வீணாக தண்ணீரில் வீசி செல்லப் பட்டுள்ளன. இதில், 40 சதவிகித ஆணுறைகள் மட்டும் அடுத்து ஆண்டு 10 / 2024 காலாவதி ஆக கூடியவை, மற்ற 60 சத விகித ஆணுறைகள் அனைத்தும் 2023 ஆம் ஆண்டு 2026 ஆம் ஆண்டுகள் வரை பயன்படுத்தக் கூடிய காலாவதியாகாத ஆணுறைகள் ஆகும்.

இங்கு எப்படி இவ்வளவு ஆணுறைகள் கொட்டப்பட்டு கிடக்கின்றன என்பது தெரியவில்லை. மருத்துவ கழிவுகள் மற்றும் மருந்து மாத்திரைகள் சுகாதார சீர்கேடு ஏற்படாத வகையில் முறைப்படி அப்புறப்படுத்தப் பட வேண்டும் என்ற விதிகள் இருக்க, இவையனைத்தும் சாலையோரம் வீசி சென்றவர்கள் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

விவசாய நிலத்தில் பாசனத்திற்காக செல்லும் வாய்க்காலில் ஆயிரக்கணக்கான ஆணுறைகள் வீசப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசு மருத்துவமனையில் வழங்கும் ஆணுறையானது எப்படி விவசாய நிலத்துக்கு செல்லும் வாய்க்காலில் வந்தது எப்படி என்பது குறித்து அரசு மருத்துவமனையில் இருந்து வந்ததா அல்லது தொண்டு நிறுவனத்திடமிருந்து வந்ததா ஆரம்ப சுகாதார நிலையம் திருச்சியில் வந்ததா என்பது குறித்து சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுகின்றனர்

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

கொரேனா பரவல்.. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கா? உண்மை இதுதான்!

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…

16 minutes ago

தக் லைஃப் தோல்வியால் சிம்புவுக்கு வந்த பிரச்சினை? கடைசில இப்படி ஆகிடுச்சே!

சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…

40 minutes ago

மக்களை ஏமாற்ற ரோடு ஷோ நடத்துகிறார்.. முதலமைச்சருக்கு எதுவும் தெரியல : அன்புமணி குற்றச்சாட்டு!

வேலூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுகுழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் மாவட்டத்தலைவர் வெங்கடேசன்,…

2 hours ago

எனக்கும் அந்த மாதிரி ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க- நெட்டிசன்களின் வலையில் சிக்கிய அதிதி பாலன்…

மனதை கவர்ந்த நடிகை :”அருவி” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அதிதி…

2 hours ago

கடனை திருப்பி தராததால் மரத்தில் பெண்ணை கட்டி வைத்து தாக்கிய விவகாரம்.. போலீசார் செக்..!!

சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…

4 hours ago

படத்தை தடை செய்தது நியாயமா? தக் லைஃப்க்கு ஆதரவாக வந்த உச்சநீதிமன்ற உத்தரவு!

மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…

4 hours ago

This website uses cookies.