தமிழகம்

ரியல் எஸ்டேட் உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசுவதாக மிரட்டல் : வழக்கறிஞரின் பரபரப்பு காட்சி!

கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் தீர்த்தகிரி. இவர் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் முரளிதரன் என்பவர் பங்குதாரராக இருந்து வருகிறார்.கோவையைச் சேர்ந்த வக்கீல் ரவிக்குமார் என்பவர் சட்ட ஆலோசகராக பணி புரிந்து வந்தார்.

சட்ட ஆலோசகராக பணி புரிந்து வந்த ரவிக்குமார் நில ஆவணங்கள் குறித்த சரிபார்ப்பு பணிகளில் பல்வேறு தவறுகளை தொடர்ந்து செய்து வந்து உள்ளார் .இதனால் அவரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலையில் இருந்து நிறுத்தி விட்டனர். இதைத் தொடர்ந்து ரவிக்குமார் அடிக்கடி குடிபோதையில் போன் மூலம் தொடர்பு கொண்டு ஆபாச வார்த்தைகள் பேசி வந்து உள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரவிக்குமார் குடிபோதையில் தீர்த்தகிரியின் வீட்டிற்கு வந்த கதவை எட்டி உதைத்து வீட்டிற்குள் செல்ல முயன்று உள்ளார். அப்போது தீர்த்தகிரி மனைவி குமாரி வெளியே வந்து உள்ளார்.

அப்போது ரவிக்குமார் ரியல் எஸ்டேட் உரிமையாளர் குறித்து தவறான தகவல்களை கூறி உள்ளார். பின்னர் கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தீர்த்தகிரியின் வீட்டிற்கு குடிபோதையில் ரவிக்குமார் வந்து உள்ளார். வாசலில் நின்று தகாத வார்த்தைகள் பேசியதை தீர்த்த கிரியின் மனைவி குமாரி வீட்டில் ஜன்னல் வழியாக பார்த்து உள்ளார். அப்போது ரவிக்குமார் வீட்டை விட்டு வெளியே வர விட்டால் பெட்ரோல் குண்டு வீசி அனைவரையும் கொலை செய்து விடுவேன் என மிரட்டி உள்ளார்.

இது குறித்து தீர்த்தகிரியின் மனைவி குமாரி சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் கோவையை கணபதியை சேர்ந்த வக்கீல் ரவிக்குமார் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

தீர்த்த கிரியின் வீட்டிற்கு குடிபோதையில் சென்று பெட்ரோல் குண்டு வீசி விடுவேன் என்று வக்கீல் ரவிக்குமார் மிரட்டும் சி.சி.டி.வி காட்சிகளை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலையை விட்டு நிறுத்தியதால் ஆத்திரம் அடைந்த வக்கீல் ஒருவர் ரியல் எஸ்டேட் உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி விடுவேன் என்று மிரட்டல் விடுத்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.