தனியார் தொழிற்சாலை நிறுவன ஊழியர்களை மிரட்டியது தொடர்பாக தாம்பரம் திமுக எம்எல்ஏ எஸ்ஆர் ராஜா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் அருகே செயல்பட்டு வரும் கார் உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலை ஊழியர்களை தாம்பரம் திமுக எம்எல்ஏ எஸ்ஆர் ராஜா மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை கிளப்பியது.
அந்த வீடியோவில், கை, கால்களை உடைத்து விடுவேன் என்றும், மாலைக்குள் கம்பெனியை மூடி விடுவேன் என்று திமுக எம்எல்ஏ மிரட்டல் விடுப்பது அந்த சிசிடிவி காட்சியில் இடம்பெற்றுள்ளது. திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலையில் தங்கள் நிறுவனத்திற்கும், தங்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு முதலமைச்சர் ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு பிரச்சனை இருப்பதாக எதிர்கட்சியினர் விமர்சித்து வரும் நிலையில், சட்டமன்ற உறுப்பினரே ஒரு நிறுவன ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட நிறுவன ஊழியர்கள் அளித்த புகாரின் பேரிலும், சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவை அடிப்படையாகக் கொண்டும், திமுக எம்எல்ஏ எஸ்.ஆர். ராஜா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே, கட்சியின் பெயருக்கு களங்கம் விளைவிப்பது போல நடந்து கொண்டதால், விரைவில் அவர் மீது கட்சி ரீதியான நடவடிக்கையை முதலமைச்சர் ஸ்டாலின் எடுப்பார் என்று தெரிகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.