தமிழகம்

எனக்கே கொலை மிரட்டலா? நான் நெல்லைக்காரன்… இதுக்கெல்லாம் பயப்படமாட்டேன் : மதுரை ஆதீனம்!

வைகையாற்றை சுத்தம் செய்வதாக கூறி தன்னிடம் வந்து காசு கேட்டு கொலை மிரட்ட விடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை ஆட்சியருக்கு மதுரை ஆதீனம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மதுரை ஆதீனம் செய்தியாளர்களிடம் பேசும் போது, என்னிடம் வைகையை சுத்தப்படுத்த வேண்டும் என ஒரு நாளைக்கு 15 ஆயிரம் கொடுங்கள் என்று சொன்னார்கள். அரசாங்கமே செய்ய வேண்டும் உங்களால் முடியாது என்று சொன்னேன்.

காசு எதற்கு என கேட்டபோது இந்த பணம் கூட கொடுக்க முடியவில்லை, எதற்கு மடம் இருக்கிறது உனக்கு தகுதி இல்லை என என்னை கூறினார்கள்.

பத்து நோட்டீசை கொண்டு வந்தார்கள். அவர்கள் என்னை பார்க்க வந்த முறையே தவறு அவர்கள் நடவடிக்கை சந்தேகமாக இருந்தது. அவர்களின் செயல்பாடு சந்தேகமாக இருந்தது.

இதில் மாவட்ட ஆட்சியர் தலையிட வேண்டும். மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கிறேன். வைகையாற்றை மக்கள் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்னை மிரட்டியவர் தொடர்பாக புகார் மனு கொடுக்க விரும்பவில்லை.

இதெல்லாம் எனக்கு சர்வ சாதாரணம். ஏச்சு பேச்சி எல்லாம் எவ்வளவு வாங்கி விட்டேன் இதெல்லாம் துடைத்துவிட்டு போய் விடுவேன், இது எனக்கு தூசி எவ்வளவோ மிரட்டியிருக்கிறார்கள்.

இதையும் படியுங்க: சிறுபான்மையினரை இழிவுப்படுத்தினாரா துணை முதலமைச்சர் : கமிஷ்னர் அலுவலகத்தில் பரபர புகார்!

என்னை அரிவாளால் வெட்டவெல்லம் வந்திருக்கிறார்கள் இதற்கெல்லாம் நான் பயந்தவன் அல்ல நான் பிறந்ததே நெல்லை மாவட்டம். திருவாரூர் என்ற பெயரில் தஞ்சாவூர் காரர்கள் வந்து எங்களை மிரட்டுகிறார்கள் நான் திருநெல்வேலிக்காரன் வெள்ளக்காரன் ஓட ஓட விரட்டியவங்க.

அவர்கள் என்னை என்ன செய்து விடுவார்கள் அதனால் தான் நான் காவல்துறையினரிடம் புகார் அளிக்க போகவில்லை என்ன செய்வார்கள் என பார்ப்போம் போனால் போகிறது உயிர் தானே.எப்படியாவது மிரட்டி பணம் வாங்கி விடலாம் என்பதற்காக வந்தார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.