சேலத்தில், தகாத உறவில் இருந்த பெண்ணுக்காக ஒருவரை கொலை செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம்: சேலம் மாவட்டம், வீராணம் வீமனூர் காட்டுவளவை என்ற பகுதியைச் சேர்ந்தவர் குமரவேல் (29). இவர் டெம்போ ஓட்டுநராக பணியாற்றி வந்தார். மேலும், இவர் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, தனது உறவுக்கார பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். ஆனால், அடுத்த சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில், குமரவேலுக்கு, அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளார். இதனிடையே, அப்பெண்ணுக்கு வீராணம் அடுத்த துளசிமணியனூரைச் சேர்ந்த பிரகாஷ் (38) என்பவருடனும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
எனவே, அவரும் அடிக்கடி அப்பெண்ணின் வீட்டிற்கு வந்து தனிமையில் உல்லாசமாக இருந்துவிட்டுச் சென்றுள்ளார். இந்த விவகாரம், குமரவேலுக்கு தெரிய வந்துள்ளது. எனவே, அவர் பிரகாஷைக் கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில், குமரவேல், அப்பகுதியில் உள்ள அய்யனாரப்பன் கோயில் அருகே மது அருந்திக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்களான மாணிக்கம், கனகராஜ் ஆகியோர் வந்து, அந்த பெண்ணுடன் இருக்கும் தொடர்பை கைவிடும்படி கூறி தகராறு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: சென்னை இரட்டைக் கொலை.. 4 வருடங்கள் கழித்து டெல்லியில் சிக்கிய டைல்ஸ் தொழிலாளி!
இதில் ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த பிரகாஷ், குமரவேலை தாக்கி கீழே தள்ளிவிட்டு, கத்தியால் அவரது கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். பின்னர், மூவரும் அங்கிருந்து தப்பி உள்ளனர். இதனையடுத்து, இது குறித்து வீராணம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, பிரகாஷ், மாணிக்கம் மற்றும் கனகராஜ் ஆகிய மூன்று பேரையும் நள்ளிரவிலே கைது செய்தனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.