தமிழகம்

காணாமல் போன சிறுமி.. மிதந்த 3 சடலங்கள்.. உடுமலையை உலுக்கிய சம்பவம்!

திருப்பூர் உடுமலைப்பேட்டை அருகே குளத்தில் பள்ளி மாணவி மற்றும் இரு இளைஞர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அடுத்த குறிச்சிகோட்டையைச் சேர்ந்தவர் 16 வயது பள்ளி மாணவி. இவர் கடந்த டிசம்பர் 18ஆம் தேதி காணமல் போனயுள்ளார். எனவே, பெற்றோர் தரப்பில் தளி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

இந்தப் புகாரின் பேரில், போலீசார் காணாமல் போன பள்ளி மாணவியைத் தேடி வந்தனர். இந்த நிலையில், இன்று குறிச்சிகோட்டை அடுத்த மானுப்பட்டி பகுதியில் உள்ள குளத்தில் மூன்று சடலங்கள் மிதப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்து உள்ளனர்.

இந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், குளத்தில் மிதந்த மூன்று சடலங்களையும் மீட்டனர். அப்போது, அதில் ஒரு சடலம் காணாமல் போன 16 வயது பள்ளி மாணவி என்பது தெரிய வந்துள்ளது. அதேநேரம், மற்ற இரு சடலங்கள் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், சென்னையைச் சேர்ந்த ஆகாஸ் (19) மற்றும் குறிச்சிகோட்டையைச் சேர்ந்த மாரிமுத்து (20) ஆகியோரின் சடலங்கள் என்பது தெரிய வந்துள்ளது. பின்னர், மூவரின் சடலத்தையும் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: ’இரண்டாவது டார்கெட் கமிஷனர் ஆபீஸ்’.. 8 பேரின் கூட்டுச் சதி.. அண்ணாமலை பரபரப்பு பேச்சு!

தொடர்ந்து, இருசக்கர வாகனத்தில் சென்றபோது மூவரும் நிலை தடுமாறி குளத்தில் விழுந்து இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இருப்பினும், பல்வேறு கோணங்களில் அமராவதி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Hariharasudhan R

Recent Posts

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

1 hour ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

2 hours ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

2 hours ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

3 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

4 hours ago

ஏடிஜிபி வழக்கில் கறார் காட்டிய உச்சநீதிமன்றம்? உத்தரவுக்கு பணிந்த தமிழக அரசு?

காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…

5 hours ago

This website uses cookies.