Categories: தமிழகம்

பள்ளி முடிந்து மகன், மகளை வீட்டிற்கு அழைத்து சென்ற சித்தப்பா : மின்னல் தாக்கி மூவரும் பலியான பரிதாபம்!!

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகாவிற்கு உட்பட்ட திருப்புனவாசல் காவல் சரகத்தில் உள்ள பறையத்தூர் கிராமத்தை சேர்ந்த இளையராஜா (வயது 38).

இவர் தனது அண்ணன் மகன் சஞ்சய் (வயது 18), சஞ்சனா (வயது 16) ஆகியோரை திருப்புனவாசலில் இருந்து பள்ளி முடிந்து இளையராஜா அவரது இரண்டு சக்கர வாகனத்தில் சொந்த கிராமமான பறையத்தூர் அழைத்து சென்றார்.

அப்போது செல்லும் வழியில் மின்னல் தாக்கி அதே இடத்தில் மூவரும் இறந்தனர். அதில் இளையராஜா என்பவர் திருப்புனவாசலில் ஹோட்டல் நடத்தி வருகின்றார்.

அவரது அண்ணன் மகன் 12 ஆம் வகுப்பு அண்ணன் மகள் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்த தகவல் அறிந்து அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் அவர்களை மீட்டு திருப்புனவாசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

அவர்களை பரிசோதித்த மருத்துவர் அவர்கள் மூவரும் இறந்துவிட்டனர் என்று தகவல் அறிந்து அவர்கள் மூவர் உடலையும் மனமேல்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து திருப்புனவாசல் காவல் துறையினர் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.