புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகாவிற்கு உட்பட்ட திருப்புனவாசல் காவல் சரகத்தில் உள்ள பறையத்தூர் கிராமத்தை சேர்ந்த இளையராஜா (வயது 38).
இவர் தனது அண்ணன் மகன் சஞ்சய் (வயது 18), சஞ்சனா (வயது 16) ஆகியோரை திருப்புனவாசலில் இருந்து பள்ளி முடிந்து இளையராஜா அவரது இரண்டு சக்கர வாகனத்தில் சொந்த கிராமமான பறையத்தூர் அழைத்து சென்றார்.
அப்போது செல்லும் வழியில் மின்னல் தாக்கி அதே இடத்தில் மூவரும் இறந்தனர். அதில் இளையராஜா என்பவர் திருப்புனவாசலில் ஹோட்டல் நடத்தி வருகின்றார்.
அவரது அண்ணன் மகன் 12 ஆம் வகுப்பு அண்ணன் மகள் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்த தகவல் அறிந்து அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் அவர்களை மீட்டு திருப்புனவாசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
அவர்களை பரிசோதித்த மருத்துவர் அவர்கள் மூவரும் இறந்துவிட்டனர் என்று தகவல் அறிந்து அவர்கள் மூவர் உடலையும் மனமேல்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து திருப்புனவாசல் காவல் துறையினர் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.