நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட பொரவச்சேரி ஊராட்சி குற்றம்பொருத்தான்இருப்பு பகுதிகளில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்டு சாராய விற்பனை படு ஜோராக விற்பனை நடைப்பெற்று வருகிறது.
மக்கள் வசிக்கும் இடம், வயல் வெளிகளில் வைத்து வியாபாரம் செய்வதால் வெளிப்பகுதிகளில் இருந்து ஆட்கள் வந்து செல்வதால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அச்சத்துடனே அப்பகுதியில் இருந்து வந்துள்ளனர்.
மேலும் அப்பகுதி ஆண்கள் காலை எழுந்த உடனே சாராயத்தை குடித்து விட்டு வேலைக்கு ஏதும் செல்லாமலே வயல் வெளிகளில் விழுந்து கிடந்தள்ளனர்.
இது குறித்து கீழ்வேளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கை எடுக்காமல் சாராய வியாபாரிகளிடம் பணம் வாங்கி கொண்டு அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் இன்று ஒன்று திரண்டு செங்கல் சூலை பகுதியில் சாராயம் விற்றவர்களை அடித்து விரட்டி அவர்களிடமிருந்து கைப்பற்றிய சாராய மூட்டைகளை சாலைகளில் போட்டு உடைத்தனர்.
மேலும் சாராய வியாபாரிகளை கைது செய்ய வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.சாராயம் வியாபாரிகள் குறித்து பல முறை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் பெண்களே சாராய வியாபாரிகளை அடித்து விரட்டி சாராய மூட்டைகளை சாலையில் போட்டு உடைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.