திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில், பேருந்து வருகைக்காக அமர்ந்திருந்த இடத்தில் பெண்கள் மீது கடைக்காரர்கள் தண்ணீர் ஊற்றியதாக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில், மற்ற பேருந்து நிலையங்களை இணைக்கும் இணைப்பு பேருந்துகளும், மாநகரின் பிற பகுதிகளுக்கு செல்வதற்கான நகரப் பேருந்துகளும் வந்து செல்கிறது. இதன் காரணமாக மத்திய பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், பேருந்துக்காக செல்லும் பொதுமக்கள் அங்கிருக்கும் கடை வாயில்களில் அமர்வது வழக்கம். அந்த வகையில், பேருந்து வருவதற்காக கடை வாயிலில் பெண்கள் அமர்ந்திருந்த இடத்தில் கடைக்காரர்கள் தண்ணீர் ஊற்றி அவர்களை விரட்டியடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இது குறித்து பொதுமக்கள் கூறும் போது, கடைக்காரர்களே நடைபாதையை ஆக்கிரமித்துள்ளதாகவும், அவர்கள் பேருந்து வருகைக்காக பொதுமக்கள் அமரும் இடத்தில் தண்ணீர் ஊற்றி அநாகரீகமாக நடந்து கொள்வது வருத்தமளிப்பதாக உள்ளது, என தெரிவித்தனர்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.