தமிழகம்

திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து இருவர் உயிரிழப்பு!

திருச்செந்தூர் கோயில் யானை தெய்வானை மிதித்ததில் பாகன் மற்றும் அவரது உறவினர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தூத்துக்குடி: அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் விளங்குகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இந்தக் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவர்கள் உள்ளூர் மட்டுமல்லாது, வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.

அதிலும், கார்த்திகை மாத விரதம் தொடங்கி உள்ளதால், பலரும் மாலை அணிவிப்பதற்காக பக்தர்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். மேலும், இந்த கோயிலில் யானை ஒன்றும் வளர்க்கப்படுகிறது. ‘தெய்வானை’ என்ற பெயர் கொண்ட இந்த யானை, அங்கு வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறது.

இந்நிலையில், இன்று (நவ.18) உணவு வழங்குவதற்காக பாகன் உதயகுமார் என்பவர் தெய்வானை யானை அருகே சென்று உள்ளார். அப்போது அவருடன், உதயகுமாரின் உறவினரான களியக்காவிளை பகுதியைச் சேர்ந்த சிசுபாலன் என்பவரும் இருந்து உள்ளார். அந்த நேரத்தில், இருவரையும் யானை பலமாக மிதித்ததாகத் தெரிகிறது.

இதில் இருவரும் அலறிய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் வந்து உள்ளனர். ஆனால், அதனிடையே சிசுபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். மேலும், படுகாயங்கள் உடன் கிடந்த உதயகுமாரை மீட்டு, திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையும் படிங்க: தவெக – அதிமுகவா? இது வேற.. புது ரூட் சொல்லும் சீமான்!

ஆனால், அவரும் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார். இதனையடுத்து, தகவல் அறிந்து வந்த திருச்செந்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து, யானை வளர்க்கும் இடத்தில் என்ன நடந்தது, இந்த உயிரிழப்புக்கான காரணம் என்னவென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Hariharasudhan R

Recent Posts

குப்பைக்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இல்லை : தூய்மை பணியாளர்கள் ஆதங்கத்துடன் போராட்டம்!

குப்பைக்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இல்லை. தூய்மை பணியாளரின் துயரம் வருட கணக்கில் நடக்கும் போராட்டம் விடியல் தருமா…

19 minutes ago

அப்போலோ மருத்துவமனையில் நடிகர் அஜித் அனுமதி… உடல்நிலைக்கு என்னாச்சு?

நடிகர் அஜித் பத்மபூஷன் விருதுடன் நேற்று சென்னை திரும்பிய நிலையில் இன்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

40 minutes ago

இனி குட் பேட் அக்லிக்கு மூடு விழாதான்! மூணே வாரத்துல இப்படி சோலியை முடிச்சிட்டாங்களே?

ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

46 minutes ago

படையப்பா ரஜினிக்கு பதில் செந்தில் பாலாஜி… கோவையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய தமிழக அரசு, அந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோவையில்…

1 hour ago

மறுபடியும் என் படத்துல நயன்தாராவ போடாதீங்க… சூப்பர் ஸ்டாரின் திடீர் கட்டளை : என்ன ஆச்சு?

நயன்தாரா தொடர்ந்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். கட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக மார்க்கெட் இறங்காமல் ஏறுமுகமாகவே இருக்கிறார்.…

2 hours ago

பிரபல நடிகையுடன் கடற்கரையில் உல்லாசம்? கையும் களவுமாக மாட்டிய கௌதம் மேனன்!

வாய்ஸ் ஓவர் இயக்குனர் கௌதம் மேனன் என்றாலே அவரது திரைப்படங்களில் இடம்பெற்ற காதல் காட்சிகள் நினைவிற்கு வரும். அதனுடன் சேர்ந்து…

2 hours ago

This website uses cookies.