Categories: தமிழகம்

யார்ரா நீ புதுசா இருக்க?.. கஞ்சா போதையில் வாலிபரை அடித்தே கொன்ற இளைஞர்கள்..!

திருச்சி திருச்சி காவிரி ஆற்றில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக
கஞ்சா போதையில் இருந்த 5 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அன்பு நகர சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மகன் ரஞ்சித்கண்ணன் (18) திருச்சியில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்தார். திருச்சி மாம்பழச்சாலை பகுதியில் இவரது உறவினர் வீடு உள்ளதால் அடிக்கடி வந்து பார்த்து செல்வது வழக்கம்.

நேற்று வழக்கம்போல் ரஞ்சித் கண்ணன் தனது உறவினர் வீட்டிற்கு வந்தபோது காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகம் ஓடுவதை காண்பதற்காக கீதாபுரம் தடுப்பணைக்கு சென்றார். அப்போது கீதாபுரம் பகுதியை சேர்ந்த சுலுக்குசுரேஷ் (26), மதன்குமார் (23), விஜய் (23), மதன், பிரகதீஸ்வரன் ஆகியோர் கஞ்சா போதையில் இருந்துள்ளனர்.

அவர்கள் ரஞ்சித்கண்ணனை பார்த்து நீ யார் புதிதாக இருக்கிறாய் என கூறி அவரிடம் சண்டையிட்டு சரமாரியாக தாக்கி உள்ளனர். காயம்பட்ட ரஞ்சித்கண்ணன் மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக உறவினர்கள் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருவானைக்காவல் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த போதிலும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக ரஞ்சித்கண்ணன் உயிரிழந்தார். காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Poorni

Recent Posts

இட்லி வர தாமதானதால் ஆத்திரம்.. ஹோட்டல் கடை உரிமையாளரின் மண்டை உடைப்பு!

வேலூர்மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியில் பேருந்து நிறுத்தம்அருகில் அமுதம் ஓட்டல் கடை உள்ளது. இதன் உரிமையாளர் சீனிவாசன் அவருடைய…

4 minutes ago

குக் வித் கோமாளியில் சிறகடிக்க ஆசை நடிகரா? இணையத்தில் லீக் ஆன போட்டியாளர்களின் பட்டியல்!

ஸ்ட்ரெஸ் பஸ்டர் தமிழக சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி திகழ்ந்து வருகிறது. இதனை Stress…

31 minutes ago

ஜனநாயகன் படத்தின் சோலியை முடிக்க ரெட் ஜெயண்ட் போட்ட பக்கா  பிளான்? பிரபலம் ஓபன் டாக்…

விஜய்யின் கடைசி திரைப்படம்  தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் 2026 ஆம் ஆண்டு…

2 hours ago

குப்பைக்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இல்லை : தூய்மை பணியாளர்கள் ஆதங்கத்துடன் போராட்டம்!

குப்பைக்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இல்லை. தூய்மை பணியாளரின் துயரம் வருட கணக்கில் நடக்கும் போராட்டம் விடியல் தருமா…

2 hours ago

அப்போலோ மருத்துவமனையில் நடிகர் அஜித் அனுமதி… உடல்நிலைக்கு என்னாச்சு?

நடிகர் அஜித் பத்மபூஷன் விருதுடன் நேற்று சென்னை திரும்பிய நிலையில் இன்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

3 hours ago

இனி குட் பேட் அக்லிக்கு மூடு விழாதான்! மூணே வாரத்துல இப்படி சோலியை முடிச்சிட்டாங்களே?

ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

3 hours ago

This website uses cookies.