Categories: தமிழகம்

யார்ரா நீ புதுசா இருக்க?.. கஞ்சா போதையில் வாலிபரை அடித்தே கொன்ற இளைஞர்கள்..!

திருச்சி திருச்சி காவிரி ஆற்றில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக
கஞ்சா போதையில் இருந்த 5 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அன்பு நகர சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மகன் ரஞ்சித்கண்ணன் (18) திருச்சியில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்தார். திருச்சி மாம்பழச்சாலை பகுதியில் இவரது உறவினர் வீடு உள்ளதால் அடிக்கடி வந்து பார்த்து செல்வது வழக்கம்.

நேற்று வழக்கம்போல் ரஞ்சித் கண்ணன் தனது உறவினர் வீட்டிற்கு வந்தபோது காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகம் ஓடுவதை காண்பதற்காக கீதாபுரம் தடுப்பணைக்கு சென்றார். அப்போது கீதாபுரம் பகுதியை சேர்ந்த சுலுக்குசுரேஷ் (26), மதன்குமார் (23), விஜய் (23), மதன், பிரகதீஸ்வரன் ஆகியோர் கஞ்சா போதையில் இருந்துள்ளனர்.

அவர்கள் ரஞ்சித்கண்ணனை பார்த்து நீ யார் புதிதாக இருக்கிறாய் என கூறி அவரிடம் சண்டையிட்டு சரமாரியாக தாக்கி உள்ளனர். காயம்பட்ட ரஞ்சித்கண்ணன் மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக உறவினர்கள் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருவானைக்காவல் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த போதிலும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக ரஞ்சித்கண்ணன் உயிரிழந்தார். காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Poorni

Recent Posts

விஜய் பாஜகவோட C team? தவெக குறித்து ஓபனாக போட்டுடைத்த பிரபலம்!

தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…

2 hours ago

ஒரு செங்கலைக் கூட இன்னும் எடுத்து வைக்கவில்லை.. திமுக பாணியை கையில் எடுத்த அண்ணாமலை!

மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…

2 hours ago

சந்தானம் போட்ட கண்டிஷனால் கடுப்பான சிம்பு? STR 49 படம் கைமாறியதற்கு காரணம் இதுதானா?

STR 49  “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…

3 hours ago

தனிமனிதனை வேட்டையாடுவதால் வரலாறை மாற்ற முடியாது : கீழடி அமர்நாத் மாற்றம்.. சு.வெங்கடேசன் கண்டனம்!

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…

3 hours ago

கொரேனா பரவல்.. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கா? உண்மை இதுதான்!

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…

4 hours ago

தக் லைஃப் தோல்வியால் சிம்புவுக்கு வந்த பிரச்சினை? கடைசில இப்படி ஆகிடுச்சே!

சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…

4 hours ago

This website uses cookies.