திருப்பூர் மாவட்டம் அவிநாசி சார்பதிவாளர் அலுவலகத்தில் கருவலுரை சேர்ந்த ஒரு நபர் வில்லங்கச் சான்று பெற வந்துள்ளார். அந்த நபரிடம் அவிநாசி சார் பதிவாளர் அலுவலகம் பணிபுரியும் தலைமை எழுத்தர் தனபால் என்பவர் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் தலைமை எழுத்தர் தனபால் வீடியோ எடுத்த அந்த நபரிடம் வில்லங்க சான்று பெற ரூ. 121 கட்டணம் செலவு ஆகும் என்று கூறுகிறார். எதிரில் உள்ள நபர் வேறு ஏதும் உங்களுக்கு கட்டணம் உள்ளதா என்று கேட்கிறார். அதற்கு உதவியாளர் தனபால் பத்தாயிரம் ரூபாய் பணம் செலவாகும். அதுபோக அந்த வில்லங்கம் சான்று பெற வந்தவரிடம் அந்த பத்தாயிரம் ரூபாய்க்கு என்னென்ன செலவு இருக்கிறது என்று கணக்கும் கூறுகிறார்.
மேலும், சாதாரணமாக ஒரு வில்லங்க சான்றுக்கு ஆயிரம் ரூபாய் ஆகும் 20 பேப்பர் என்பதால் குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாய் அதற்கு மேல் செலவாகலாம் என்று கூறுகிறார். வில்லங்கம் பேறும் சேவைக்கு அரசு தரப்பில் 121 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த லஞ்சம் கேட்கும் உரையாடல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.