திருப்பூரில் வீட்டில் நாட்டு வெடி தயாரித்த போது ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 மாத குழந்தை உட்பட 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் உள்ள பொன்னம்மாள் வீதியில் கார்த்திக் என்பவரது வீட்டில் திருவிழாவுக்கான பட்டாசுகள் தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்ட போது இன்று மதியம் வெடி விபத்து ஏற்பட்டது.
கார்த்திக், சத்திய பிரியா தம்பதியினர் வசித்து வரும் இந்த வீட்டில் இவர்களது உறவினர் சரவணகுமார் சொந்தமான பட்டாசு கடைக்கு தேவையான திருவிழா பட்டாசுகள் தயாரிக்கப்பட்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
மேலும் சரவணகுமார் பட்டாசு தயாரிப்புக்கான உரிமத்தை ஈரோட்டில் பெற்றிருப்பதாகவும் ஆனால் சட்ட விதிமிறைகளுக்கு புறம்பாக வீட்டில் வைத்து தயாரித்ததால் விபரீதம் ஏற்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் லட்சுமி தெரிவித்துள்ளார்.
இந்த வீட்டில் ஏற்பட்ட விபத்தில் காரணமாக அருகில் இருந்து 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளது எனவே அதனை ஆய்வு செய்து அதற்கான நிவாரணம் வழங்கும் பணியை மேற்கொண்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தெரிவித்தார்.
மேலும் வெளி தயாரிப்பில் ஈடுபட்டது தொடர்பாக சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார். வலி விபத்தின் போது அருகில் இருந்தவர்கள் பலத்த சத்தம் கேட்டதாகவும் ஒரு உடல் சிதறி அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு வீசி எறியப்பட்டதாகவும் தெரிவித்த அவர்கள், பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டது தங்களுக்கு தெரியவில்லை என தெரிவித்தனர்
மேலும் பட்டாசு தயாரிப்பு ஈடுபட்ட நபர்கள் குறித்த தகவலை திரட்டும் பணியிலும் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்
இதுபரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். சிகிச்சை பலனின்றி குமார் என்பவரும் மற்றும் 9 மாத குழந்தை ஆலிய செர்ரின் என்பதும் உடல் சிதறி இறந்த பெண் யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.