திருப்பூர் மாவட்டத்தில் ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் 6வது நாளாக கல்குவாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வேலை நிறுத்தத்தில் 500க்கும் மேற்பட்ட ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும், கற்கள் விற்பனையும் முற்றிலும் நிறுத்தப்படுவதால் கட்டுமான பணிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு கல் குவாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வேலை நிறுத்தத்திற்கு சமூக தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி, திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி காங்கேயம் தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட ஹாலோ பிளாக் கூடங்கள் மூடப்பட்டுள்ளது. 10 ஆயிரம் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாக 1 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும், நாள் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாய் வரையிலும் உற்பத்தி பாதிப்பு ஏற்பட கூடும் என தெரிவித்தனர்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.