திருப்பூர் அருகே, கஞ்சா ஆசாமிகள் பெண்ணிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருப்பூர் அருகே இடுவாய் ஊராட்சி பாரதிபுரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. கணவர் இறந்த நிலையில், அப்பகுதியில் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், பாரதிபுரம் பகுதியை சேர்ந்த சின்ன சூர்யா மற்றும் பெரிய சூர்யா என்ற இருவரும் அப்பகுதியில் உள்ள கடைகளில் மாமுல் வசூலிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, கஞ்சா போதையில் கிருஷ்ணவேணி கடைக்கு சென்ற சின்ன சூர்யா மற்றும் பெரிய சூர்யா இருவரும் பணம் கேட்டுள்ளனர். கிருஷ்ணவேணி பணம் தர மறுத்தாகவும், இதில் ஆத்திரமடைந்த இருவரும் கிருஷ்ணவேணியை தகாத வார்த்தைகளால் பேசி, கடையில் இருந்த பாட்டில்களை உடைத்தும், கிருஷ்ணவேணியை கீழே தள்ளியும் தகராறில் ஈடுபட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
கஞ்சா போதையில் மாமூல் கேட்டு பெண்ணிடம் தகராறில் ஈடுபடும் வீடியோவானது, தற்போது சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, மங்கலம் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் இருவர் மீதும் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.