திருப்பூர் அருகே, கஞ்சா ஆசாமிகள் பெண்ணிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருப்பூர் அருகே இடுவாய் ஊராட்சி பாரதிபுரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. கணவர் இறந்த நிலையில், அப்பகுதியில் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், பாரதிபுரம் பகுதியை சேர்ந்த சின்ன சூர்யா மற்றும் பெரிய சூர்யா என்ற இருவரும் அப்பகுதியில் உள்ள கடைகளில் மாமுல் வசூலிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, கஞ்சா போதையில் கிருஷ்ணவேணி கடைக்கு சென்ற சின்ன சூர்யா மற்றும் பெரிய சூர்யா இருவரும் பணம் கேட்டுள்ளனர். கிருஷ்ணவேணி பணம் தர மறுத்தாகவும், இதில் ஆத்திரமடைந்த இருவரும் கிருஷ்ணவேணியை தகாத வார்த்தைகளால் பேசி, கடையில் இருந்த பாட்டில்களை உடைத்தும், கிருஷ்ணவேணியை கீழே தள்ளியும் தகராறில் ஈடுபட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
கஞ்சா போதையில் மாமூல் கேட்டு பெண்ணிடம் தகராறில் ஈடுபடும் வீடியோவானது, தற்போது சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, மங்கலம் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் இருவர் மீதும் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.