திருப்பூர் ரயில்நிலையத்தில் இந்தியில் வைக்கப்பட்ட அறிவிப்பு பலகைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்தனர்.
திருப்பூர் ரயில்நிலையத்தை தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, திருப்பூர் தொழில்நகரம் என்பதால் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இவர்கள் ரயில் மூலமாக தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று வருவது வழக்கம்.
திருப்பூர் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் சந்தேகங்களை தீர்த்து வைக்கும் விதமாக, தகவல் மையம் செயல்பட்டு வருகிறது. இதன் வெளியே, ஆங்கிலத்தில் இன்பர்மேஷன் சென்டர், தமிழில் சேவை மையம் மற்றும் ஹிந்தியிலும் எழுதப்பட்டிருந்தது.
இந்நிலையில், புதிதாக அச்சிடப்பட்ட பேப்பர் அறிவிப்பு பதாகை சேவை மையத்தின் முன்பு ஒட்டப்பட்டிருந்தது கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. இதில் ஹிந்தி எழுத்துக்களில் சகயோக் என எழுதப்பட்டிருந்தது. அதிக அளவில் வடமாநில தொழிலாளர்கள் வருவதால் அவர்களுக்கு புரியும் வகையில் எழுதப்பட்டிருப்பதாக பலரும் எண்ணிய நிலையில், அதன் மேலே ஆங்கிலத்திலும் சகயோக் எனவும், தமிழ் எழுத்திலும் சகயோக் என அச்சிடப்பட்டிருந்தது தான் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
ஆங்கிலத்தில் இன்பர்மேஷன் சென்டர் எனவும், தமிழில் சேவை மையம் என எழுதப்பட்டால் மட்டுமே பயணிகளுக்கு புரியும் என்றும், ஹிந்தியில் சகயோக் என எழுதப்பட்டால் தமிழ் பயணிகளுக்கு என்ன என்பதே தெரியாது என்று குரல்கள் ஒலித்தன. மேலும், இது அப்பட்டமான இந்தி திணிப்பு என புகைப்படத்துடன் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பியது.
இதனையடுத்து ரயில்வே அதிகாரிகள் சேவை மையத்தின் முன்பு ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பு பெயர் பதாகையை அகற்றினர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.