திருப்பூர் : திருப்பூரில் மனைவியுடனான தொடர்பை துண்டிக்க சொல்லியும் கேட்காத டெய்லரை வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த உபேந்திரா (50) என்பவர் மனைவி சித்ராதேவி (43) மற்றும் 3 மகன்களுடன் திருப்பூர் நெசவாளர் காலனி திருமலை நகரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் சரக்கு ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.
அவர் தங்கியிருக்கும் வீட்டின் அருகே பீகார் மாநிலம் தாத்தோர் பகுதியைச் சேர்ந்த பவன் (27) என்பவர் தங்கி இருந்து பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில், சித்ராதேவியுடன் பவன் நெருங்கி பழகியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 19ம் தேதி இரவு தனது மனைவியுடன் கள்ள தொடர்பு வைத்துள்ளதாக சந்தேகப்பட்டு பவனிடம் தகராறு செய்த உபேந்திரா அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினார். இதில், சிகிச்சை பலனின்றி பவன் இறந்தார்.
இதுகுறித்து வடக்கு போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து உபேந்திராவை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே, ஜார்க்கண்டில் பதுங்கியிருந்த உபேந்திராவை கைது செய்து திருப்பூர் அழைத்து வந்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியது. அதாவது, நான் வேலைக்கு செல்லும் நேரத்தில் பவன் எனது வீட்டிற்கு வந்து எனது மனைவியிடம் சிரித்து பேசி பழகியுள்ளார். இதையறிந்த நான் பவன் மற்றும் மனைவியை கண்டித்தேன். இருப்பினும் பவன் தொடர்ந்துஎனது மனைவியுடன் பழகி வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்று விட்டு வந்த போது பவன் எனது வீட்டில் இருந்தார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் பவனை வெட்டிக்கொலை செய்தேன், என்றார்.
கலவையான விமர்சனம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான…
11 வது சர்வதேச யோகா தினத்தையொட்டி வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் முன்னாள்…
ரவி மோகன் விவகாரம் தான் தற்போது கோலிவுட்டில் செம ஹாட்டான் விவகாரம். மனைவி ஆர்த்தியை பிரிந்து வந்த ரவி மோகன்…
ஹிட் அடித்த ஹிட் 3 தெலுங்கில் மாஸ் ஹீரோவாக வலம் வரும் நானியின் நடிப்பில் கடந்த மே 1 ஆம்…
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை சந்தைமேடு பகுதியில் தமிழக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நகரச்…
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
This website uses cookies.