இஷ்டமிருந்தால் குடிங்க.. இல்லைனா கிளம்புங்க என்று திருப்பூரில் பாரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்பவர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருப்பூர் – கேவிஆர் நகரில், செயல்படும் டாஸ்மாக் கடை எண் 1927 மதுக்கூடத்தில் 24 மணி நேரமும் மது விற்கப்படுவதாகவும், இங்கு கலப்படம் மதுவும் விற்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்து வருகின்றனர்.
இப்படியிருக்கையில், நேற்று நள்ளிரவில் மதுப்பிரியர் ஒருவர், சட்டவிரோதமாக பாரில் விற்கப்படும் மதுவை வாங்கியுள்ளார். அப்போது, சீல் உடைக்கப்பட்ட நிலையில் பாட்டில் இருந்ததாகவும், இதுகுறித்து கேட்டால் டாஸ்மாக் கடை விற்பனையாளர் தருவதைத்தான் நான் விற்பனை செய்வதாகவும், இஷ்டமிருந்தால் குடிங்க, இல்லன்னா காச வாங்கிட்டு போங்க என்று மது விற்பனை செய்பவர் அலட்சியமாக பதில் கூறியுள்ளார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுபோன்ற சட்ட விரோத மது விற்பனையை தடை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.