திருப்பூர் அருகே கோவில் பூசாரி தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (72). இவரது மனைவி பார்வதி (65). இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். சுப்பிரமணி அப்பகுதியில் உள்ள கோவிலிலேயே தங்கி பூசாரியாக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், இன்று காலை இவரது மகள் சுப்பிரமணி தங்கியிருந்த அறைக்கு உணவு கொடுக்க வந்த போது, அறை முழுவதும் ரத்தமாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தவர், கோவிலின் பின்புறம் சென்று பார்த்துள்ளார். அங்கு சுப்பிரமணி எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.
சம்பவம் குறித்து அனுப்பர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுப்பிரமணியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, முன்விரோதம் காரணமாக சுப்பிரமணி கொலை செய்யப்பட்டாரா..? அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.