திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூரில் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நடை பயிற்சி சென்றபோது இரு சக்கர வாகனத்தில் வந்த கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூர் ஊராட்சி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அதிமுக பிரமுகர் பார்த்திபன். இவர் தனது வீட்டின் அருகே உள்ள விளையாட்டு திடல் அருகே பார்த்திபன் காலை சுமார் 5.30 மணியளவில் நடைபயிற்சிக்கு சென்றிருந்தார்.
அவரை இருசக்கர வாகனத்தில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் சரமாரியாக முகம் மற்றும் தலைப்பகுதிகளில் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடியது.
ரத்த வெள்ளத்தில் படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், பின்னர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்ததை தொடர்ந்து, செங்குன்றம் போலீசார் கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்தனர்.
பின்னர், சம்பவ இடத்தில் ஆவடி இணை ஆணையர் விஜயகுமார் உள்ளிட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு, முன்விரோதம் காரணமாக அவரை வெட்டி கொலை செய்தனரா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர் மீது ஆந்திர மாநிலத்தில் சர்வதேச செம்மர கடத்தல் வழக்கும், கடப்பா உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ள நிலையில், இவரை முன் விரோதம் காரணமாக வெட்டி கொலை செய்தனரா..? அல்லது அரசியல் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செங்குன்றம் பகுதியில் நடை பயிற்சியின் போது, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அதிமுக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளர் நடை பயிற்சியின் போது கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
சாலையில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகளைக் கொண்டு மர்ம நபர்களை போலீசார் வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.