மீஞ்சூர் வண்டலூர் வெளிவட்ட சாலையில் பைக் ரேஸில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களை கைது செய்த போலீசார், அவர்களின் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபடுவதாக ஆவடி காவல் ஆணையர் அவர்களுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், பைக் ரேஸ் நடைபெறாமல் இருக்க போக்குவரத்து புலனாய்வு பிரிவினர் குழு அமைத்து கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில், அருமந்தை சோழவரம் வெளிவட்ட சாலைகளில் இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின் பேரில், செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு பைக் ரேசில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து நாரவாரி குப்பம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் பாபு, புழல் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த லெனின் ஜான்சன், வயுதிகைமேடு பகுதியைச் சேர்ந்த தினேஷ் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.
பின்னர், ரேசுக்கு பயன்படுத்தி மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஓட்டுநர் உரிமம் வீடியோ எடுக்க பயன்படுத்திய கைப்பேசிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.